Monday, July 20, 2009

அம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிகையாளர்கள் (இனத் துரோகிகள்!)



'நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சீமான் சனியன்று நடத்தியபொதுக் கூட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர் ஒரு கருத்தைவெளியிட்டிருக்கிறார்.


அவர் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழுணர்வுக்கு எதிராக தமிழக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகபத்திரிகையாளர்கள் 24 பேருக்கு தலா ஐந்து பவுன்ப்ரேஸ்லெட்களை (ஆண்கள் அணியும் வளையல்) கடந்த பொங்கல் அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துணைத் தூதர் அம்சா வழங்கியிருக்கிறார்.அதுமட்டுமின்றி பத்திரிகை அலுவலங்களுக்கு தலா இருபது மடிக்கணினிகளையும்வழங்கியிருக்கிறார், அம்சா.


அதில் தினத்தந்தி மட்டுமேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணினிகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது.தினத்தந்தி, தினமணி, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள்மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்உள்ளது என்றும் கஸ்பர் பேசியிருக்கிறார்.



அவர் பேசியதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.24 நிருபர்கள், பத்திரிகையாளர்களுக்கு ப்ரேஸ்லெட்கள்கொடுக்கப்பட்டதுதான். இதைக் கேட்கவே மலத்தைமிதித்தது போன்ற ஒரு அருவறுப்பு ஏற்படுகிறது.அந்த நிருபர்கள் மற்றும் கணினி பெற்றுக் கொண்ட பத்திரிகை அலுவலகங்களின்பட்டியலை வெளியிட்டால்நன்றாக இருக்கும்.


கஸ்பர் நேரடியாக இல்லாவிட்டாலும்மறைமுகமாக அந்தப் பட்டியலை வெளியிட்டால்தமிழர்களுக்கு நம் எதிரிகளை அடையாளம் காட்டியமிகப் பெரிய வேலை வெற்றிகரமாக முடிந்து விடும். செய்வாரா?உங்களில் யாராவது அவரை நேரில் பார்த்தால் என் கோரிக்கை பற்றி சொல்லவும்.

1 comment: