Wednesday, August 12, 2009

தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி




பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.


பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.


இதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.



1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.


2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.


3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.


4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.


5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-?


6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-?


7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.



இதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-?


இப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.