Tuesday, March 30, 2010

மர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்!

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்
என்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போதே ஏன் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம்? (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.


அதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்?

அடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா? உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் அவரோடு இறந்தவர்கள் மீது
பரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா? அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்?

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.


அடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால்? அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா? ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா? அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா?)


அசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன? நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....

Monday, March 29, 2010

நளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...




நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா? மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா?

மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம்? ராஜீவுக்கு ஒரு நியாயமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.

கருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.

தனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின? நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா?

நளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...

Friday, March 5, 2010

ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்!




டெல்லியில் திரிவேதி சாமியார் இன்டர்நெட் மூலம் விபசார புரோக்கராக செயல்பட்டார் என்று வெளியான தகவல் வடஇந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆந்திரா, தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் அவருடைய பக்தர்கள் போதை மயக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் இட்டுக் கொண்டிருக்க அதை கண்கள் சொருகிய போதையோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருககிறார், கல்கி பகவான்.

இந்தக் காட்சி தெலுங்கு சேனலில் ஒளிப்பரப்பாக அவரது ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு பரபரப்பாகிக்கிடக்கிறது. இந்நிலையில்தான் கர்நாடகம், தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரமஹம்ச நித்யானந்த சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட (அன்னதான) கூட்ட நெரசலில் சிக்கி 70 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்தவை. இவைகளை எல்லாம் பொருத்திப் பார்த்தால் சந்தேகம் எழுகிறது.

அதுவும் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சதி வலைகள் பின்னுவதில் தேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் உளவு நிறுவனம் உலகம் முழுவதும் செய்த கொலைகள் எத்தனையோ மறைக்கப்பட்டிருக்கினறன என்று அந்த நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ் கூறுவதை மேற்கண்ட சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ சதி வேலை இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அம்பலமாகிறது. நான் ஏதோ மேற்கண்ட சாமியார்களுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அம்பலமாகி ஊடகங்களின் பார்வையை குவிக்கச் செய்திருப்பதைத்தான் நான் சந்தேகத்தோடு நோக்குகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயத்தையே வேரோடு அழிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். மக்களை விடுங்கள் இங்குள்ள எத்தனை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி தெரியும்? (பார்க்க .இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டர்)
இந்தச் சட்டம் நிறைவேறினால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்தால் ஓராண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்திய நிலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் விவசாயம் செய்யும். பணப்பயிர்களை விளைவித்து அவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதன்மூலம் செயற்கையாக ஒரு பஞ்சத்தை உருவாக்கப் போகிறார்கள். இதுமட்டுமின்றி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியின்படி 2011 ம் ஆண்டுக்குள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆம் நாம் எல்லாம் அமெரிக்க அடிமைகளாகிவிட்டோம்.

விடயத்துக்கு வருகிறேன். ஆகவே இப்படி வரப்போகிற நிறைவேற்றப்போகிற மக்கள் விரோத சட்டங்களையும், உர விலையை ஏற்ற மாட்டோம் ஆனால் உர நிறுவனங்கள் இஷ்டப்பட்ட படி விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற படு தேவடியாத்தனமான பட்ஜெட் அறிவிப்புகளையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கண்டு கொள்ளாமல் மக்களும், பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அதற்காக மேற்கண்ட சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய அனுமானம். இதில் அமெரிக்காவின் விருப்பப்படி இந்து மதத் துவேசமும் அடங்கியிருக்கிறது (எனக்கு எந்த மதமும் கிடையாது). நான் இப்படி எழுதுவது இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கத்தான். யோசியுங்கள். விவாதியுங்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாடு தன்னுடைய நலனுக்காக உலகில் எத்தனையோ உயிர்களை பலியாக்கியிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி என் சந்தேகத்தை ஆராயுங்கள்.

Thursday, March 4, 2010

குஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்! சிறுத்தைகளின் ஆசை...


திருச்சியில் நேற்று நடந்த கலைஞர் குடிசைமாற்று வாரிய தொடக்க விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிகுமார், “கலைஞருக்கு கோயில் கட்ட வேண்டும். நாத்திகரான அவர் இதை விரும்பமாட்டார். அவருக்கு இதை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார் (ஆதாரம் நம்தினமதி நாளிதழ்)

இதைப் படித்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை.
வி.சி.கட்சியின் அறிவாளி, எழுத்தாளர் என்றெல்லாம் கூறப்படும் ரவிகுமார், அண்மையில்
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயைப் பற்றி வியந்து வியந்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியிருந்தார். எளிமையான அருந்திராய் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது ரவிகுமாரின எளிமையைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்போது அதுபற்றி நான் பேச வரவில்லை. அருந்ததிராயைப் புகழும் நீங்கள் பத்திரிகைகளில் ஆய்ந்து ஆய்ந்து கட்டுரைகள் எழுதும் நீங்கள் சமூக சீர்திருத்தத்தை எதிர்பார்க்கும் ரவிகுமார், கருணாநிதிக்குக்கோயில் கட்டுவதால் இந்த சமூகத்தில் என்ன மாறுதல் புரட்சி ஏற்பட்டு விடும் என்று கருதுகிறார்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்நோக்கி சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர் கருணாநிதிக்கு கோயில் கட்டச் சொல்வதில் அந்த மக்களின் முன்னேற்றத்தில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது. ரவிகுமார் அவர்களே, நீங்கள் ஒரு பேச்சுக்கு இதை சொல்வதாக இருந்தால் கருணாநிதியை இப்படி நக்கி (மன்னிக்கவும்) புகழ்வது எதற்காக? அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன? குஷ்பு, நமீதாவுக்குக் கோயில் கட்டும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.
ஆனால், புத்தரைப் பற்றி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சதா காலமும் சந்திக்கும் நீங்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை அப்படியே சொல்வதென்றால், அடச்சீ....