Tuesday, March 30, 2010

மர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்!

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்
என்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போதே ஏன் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம்? (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.


அதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்?

அடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா? உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் அவரோடு இறந்தவர்கள் மீது
பரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா? அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்?

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.


அடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால்? அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா? ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா? அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா?)


அசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன? நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....

No comments:

Post a Comment