Tuesday, July 7, 2009

பச்சோந்தி கருணாநிதி முகத்தில் காறித் துப்புங்கள்!



‘‘இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம். சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது’’ இப்படி சட்டப்பேரவையில் அண்மையில் திருவாய் மலர்ந்தார், தமிழினத் தலைவர் கருணாநிதி.


சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. அது பற்றி பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு சரியான நேரத்தை நமது கருணாநிதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.


அந்தப் புத்தகத்தின் தலைப்பு:


‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’.1985 அக்டோபர் 3 முதல் 13 ஆகிய நாட்களில் முறையே கோவை, திண்டுக்கல், தூத்துக்கு, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் பேரணி, பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியது, அந்த நூல்.


அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலேயே இப்படி வருகிறது:


இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து காக்கத் தமிழ்ஈழம் மலர்வதுதான் ஒரே வழி என்பதை வலியுறுத்தி, தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்தும் பேரணி_பொதுக்கூட்டங்களில் தலைவர் கலைஞர் (இதே கருணாநிதிதான்) அவர்கள் மக்களிக்கிடையில் படித்து ஏற்கும் உறுதிமொழி.


1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு தருவோம்!


2.இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும், நிரந்தர பாதுகாப்பும் கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்!


3.தமிழ் ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவற மாட்டோம்!


4.இந்தக் கடமைகளில் நாங்கள் செய்யும்போது மத்திய_மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம், என்ற ரீதியில் போகிறது அந்தப் புத்தகம்.


1985_ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா. இரு மாநில அரசையும் இலங்கைப் பிரச்னையில் தலையிட வலியுறுத்தி கருணாநிதி போட்ட வேஷத்தின் அடையாம்தான் இந்தப் புத்தகம்.


1985_ல் எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ் ஈழத்துக்காக உயிரையும் கொடுப்பாராம். போராளிகளுக்கு அடைக்கலம் வேறு கொடுப்பாராம் இந்த கேடு கெட்டக் கருணாநிதி.


ஆனால் இப்போது சிங்களவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழ் ஈழம் கோரிக்கையை யாரும் எழுப்பக் கூடாதாம். இவனைப் போல் ஒரு அயோக்கியனை வேறு எங்கும் பார்க்க முடியாது.


நாளுக்கு நாள் பச்சோந்தியை விட நிறம் மாறியிருக்கிறான். இப்போது சாவும் தருவாய், வாரிசுகளுக்குப் பதவிப் பெற்றுத் தருவதற்காக மாபெரும் இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.


இவ்வளவு பேசும் கருணாநிதி, இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ஒரு கண்டனமானவது தெரிவித்தானா?


எனக்குக் கிடைத்துள்ள இந்தப் புத்தகத்தை ரீ ப்ரிண்ட் போட்டு பரப்பலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவு நியாயத்தை அப்போது பேசிவிட்டு இப்போது எழுந்து கூட நிற்கமுடியாத நிலையில் அயோக்கியத்தனம் செய்கிறான் கலைஞர்.


என் வாழ்வுக்கு ஒரு உன்னதம் கிடைக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் முகத்தில் காறித் துப்ப வேண்டும். இவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பின்னூட்டம் இடுபவர்களைப் பார்த்து வருத்தமடைவேன்.

2 comments:

  1. intha thurookiyaal ellam mudinthu vittahtu. 30000 perin savukkum inhta naai than karanam.

    ReplyDelete
  2. தவறு.தமிழனின் எச்சில் துரோகியின் முகத்தை கூட நனைக்க கூடாது.

    ReplyDelete