Monday, April 12, 2010

தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேன்டா...,




உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகிறார். அதுவும் தண்டகாரண்யத்தில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, போன்றவர்கள் துணையாக நிற்கிறார். மீடியாகளும் ப.சி.க்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

எதற்கு இந்தப் பாராட்டு என்கிறீர்களா?

மேலே படியுங்கள்...

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.


உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. அதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டன.

ஓட்டுப் பொறுக்கிகள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்து பழங்குடி மக்களை விரட்டி அடிக்கத் தீர்மானித்தனர். தங்களது வாழ்வாதாரம் பறிபோனால் நகரத் தெருக்களில் பிளாட்பாரங்களில் அல்லாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களை வெளியேற்றி கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​இங்கே தான் ஏற்கெனவே தங்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களின் உதவியை நாடினர், பழங்குடி மக்கள்.


தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முடிவை கைவிட்டால்தான் அந்த மக்களும் அந்த மக்களுக்காக களம் காணும் மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களை கீழே போடுவார்கள். ஆனால் அந்தக் கனிம நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் ப.சிதம்பரம் (அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களை நகரங்களில் பிச்சை எடுக்க வைப்பதுதான் ப.சிதம்பரத்தின் லட்சியம். இதை மன்மோகன் சிங் வேடிக்கை பார்க்கிறார். சோனியா காந்தி வேடிக்கை பார்க்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் கனிமொழி, திருமா போன்றவர்களும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வக்கில்லாத மீடியாகள் இதைவிட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம். (அதைத்தானே இப்போதும் செய்து வருகிறது)

எங்கோ காட்டில் நிம்மதியாக வாழும் அந்த மண்ணின் மைந்தர்களை அழிக்கும் உங்கள் இந்திய தேசியம் வாழ்க... இதற்கு மேலும் எவனாவது தேசப்பற்று பத்தி பேசினால் செருப்பால அடிப்பேன்.... ப.சி.யை செருப்பால் அடித்து புண்ணியம் கட்டிக் கொண்ட சீக்கிய பத்திரிகையாளனுக்கு என் வீரவணக்கங்கள்...

Tuesday, April 6, 2010

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகத்துக்கு செருப்படி!


திண்ணைப் பள்ளிகளாகும் பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா (தினமணி கட்டுரை)


ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.
நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​


சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது. கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.
''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''
என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.


இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'
கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?
சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.
பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.


​ அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.
வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.
நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.


வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!
​ கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!


நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?


"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே! காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.
பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?


கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?
பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.



காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.
சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!​ ​
காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?
தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.


காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!
வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ். உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!


​ திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​ வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே! தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது. திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

Saturday, April 3, 2010

ஐந்து நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை




எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக நான் பதிவெழுதுவதில்லை.அதே நேரத்தில்
எழுதத்தூண்டும் நேரங்களில் எல்லாம் எழுதிவிடுவதும் இல்லை. எழுதியே ஆக வேண்டும்
என்ற தாக்கமும், அதற்குரிய நேரமும் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன்.
ரொம்ப நாட்களாக புதிய தலைமைச் செயலகம் பற்றிய என்னுடைய எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

புதிய சட்டப் பேரவை கட்டடம் பற்றிய நிறைய விடங்கள் உண்டு. ஆனால், நான் பேசப் போவது அதில் உள்ள சட்டம் தொடர்பான ஒரு பிரச்னையைப் பற்றி. அதாவது ஒரு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், அந்த இடத்தில் இப்படித்தான் அந்தக் கட்டடம் இருக்கும் என்ற ப்ளானைக் காட்டி (அப்ரூவல்) அங்கீகாரம் பெற்று கட்டடத்தைக் கட்ட வேண்டும். பெரும்பாலும் அங்கீகாரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் ப்ளான்படி யாரும் கட்டடம் கட்டுவது கிடையாது. அப்படி கட்டவும் முடியாது. ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ள ஒழுங்குமுறைப்படி கட்டடம் கட்டுவதில் நிறைய பிரச்னைகள் உண்டு. (ஒரு கட்டடத்திற்குள் வந்து போகும் மக்களின் நலனுக்காகவே இதுபோன்ற சட்ட கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்)

சென்னைத் தலைமைச் செயலகக் கட்டடத்திற்கும் இதேபோல் ப்ளான் அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட்ட நாள் 8.3.2010 (அரசாணை எண் MS. NO: 54) ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்பிங் டிபார்ட்மென்ட் சார்பில் அரசாணை வெளியிட்டு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான ப்ளானை அப்ரூவல் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஆனால் இந்த அரசாணை வழங்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது, 13.3.2010. அதாவது ஐந்து நாட்களில் அந்த ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்திருக்கிறார்களாம். நடந்தது என்னவென்றால், ப்ளான் அப்ரூவலுக்கு முன்பே அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமீறல்.

இன்னும் கட்டுமானப்பணி நடக்கிறதென்றால், கட்டி முடிக்காத கட்டடத்தில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே செயல்பட்டு வந்த கோட்டையிலிருந்து இவ்வளவு அவசரமாக காலி செய்து இங்கே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய காரணங்கள் என்ன? ப்ளானிங் அப்ரூவல் இன்றியே ஏழு மாடிக் கட்டடத்தை கட்டி முடிக்க இந்த அரசு சட்ட மீறலை செய்திருக்கிறது. அதுவும் சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தைக் கட்டவே சட்டமீறல் என்றால், அவர்களுக்கு சட்டமியற்ற என்ன அருகதை இருக்கிறது. சட்டத்தை மீறும் இவர்கள் எப்படி சட்டப்படியான நியாயப்படியான அரசை நடத்த அருகதை பெற்றவர்கள் ஆவார்.

பழைய வாடகை கட்டடத்தில் இருந்து சொந்தமான கட்டடத்திற்கு சட்டப் பேரவையைக் கொண்டு வர வேண்டும் என்றால் முறைப்படி, சட்டப்படி உரிய அனுமதி பெற்று ப்ளான் அப்ரூவல் வாங்கி கட்டடம் கட்ட வேண்டியதுதானே. அதற்குள் அவசரம் வேண்டியிருக்கிறது. நாளைக்கே தீவிரவாதிகள் உள்ளே புகுந்து (மும்பை தாஜ் ஹோட்டல் போல்) தாக்குதல் நடத்தினால் இந்தக் கட்டடத்திற்கான உரிய வரைப்படம் (ப்ளான்) இல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடியும்.

(பி.கு) நள்ளிரவில் தன்னைக் கைது செய்து கொண்டுவரப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலக
வளாகத்தை இடித்துத்தான் புதிய சட்டப் பேரவையைக் கட்டியிருக்கிறார், கலைஞர்.

அதேபோல் தன்னை அடைத்து வைத்திருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்குக் கொண்டு சென்று விட்டு, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் அந்த இடத்தில் அரசு மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.

Tuesday, March 30, 2010

மர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்!

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்
என்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போதே ஏன் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம்? (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.


அதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்?

அடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா? உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் அவரோடு இறந்தவர்கள் மீது
பரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா? அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்?

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.


அடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால்? அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா? ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா? அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா?)


அசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன? நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....

Monday, March 29, 2010

நளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...




நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா? மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா?

மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம்? ராஜீவுக்கு ஒரு நியாயமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.

கருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.

தனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின? நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா?

நளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...

Friday, March 5, 2010

ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்!




டெல்லியில் திரிவேதி சாமியார் இன்டர்நெட் மூலம் விபசார புரோக்கராக செயல்பட்டார் என்று வெளியான தகவல் வடஇந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆந்திரா, தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் அவருடைய பக்தர்கள் போதை மயக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் இட்டுக் கொண்டிருக்க அதை கண்கள் சொருகிய போதையோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருககிறார், கல்கி பகவான்.

இந்தக் காட்சி தெலுங்கு சேனலில் ஒளிப்பரப்பாக அவரது ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு பரபரப்பாகிக்கிடக்கிறது. இந்நிலையில்தான் கர்நாடகம், தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரமஹம்ச நித்யானந்த சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட (அன்னதான) கூட்ட நெரசலில் சிக்கி 70 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்தவை. இவைகளை எல்லாம் பொருத்திப் பார்த்தால் சந்தேகம் எழுகிறது.

அதுவும் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சதி வலைகள் பின்னுவதில் தேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் உளவு நிறுவனம் உலகம் முழுவதும் செய்த கொலைகள் எத்தனையோ மறைக்கப்பட்டிருக்கினறன என்று அந்த நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ் கூறுவதை மேற்கண்ட சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ சதி வேலை இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அம்பலமாகிறது. நான் ஏதோ மேற்கண்ட சாமியார்களுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அம்பலமாகி ஊடகங்களின் பார்வையை குவிக்கச் செய்திருப்பதைத்தான் நான் சந்தேகத்தோடு நோக்குகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயத்தையே வேரோடு அழிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். மக்களை விடுங்கள் இங்குள்ள எத்தனை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி தெரியும்? (பார்க்க .இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டர்)
இந்தச் சட்டம் நிறைவேறினால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்தால் ஓராண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்திய நிலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் விவசாயம் செய்யும். பணப்பயிர்களை விளைவித்து அவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதன்மூலம் செயற்கையாக ஒரு பஞ்சத்தை உருவாக்கப் போகிறார்கள். இதுமட்டுமின்றி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியின்படி 2011 ம் ஆண்டுக்குள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆம் நாம் எல்லாம் அமெரிக்க அடிமைகளாகிவிட்டோம்.

விடயத்துக்கு வருகிறேன். ஆகவே இப்படி வரப்போகிற நிறைவேற்றப்போகிற மக்கள் விரோத சட்டங்களையும், உர விலையை ஏற்ற மாட்டோம் ஆனால் உர நிறுவனங்கள் இஷ்டப்பட்ட படி விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற படு தேவடியாத்தனமான பட்ஜெட் அறிவிப்புகளையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கண்டு கொள்ளாமல் மக்களும், பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அதற்காக மேற்கண்ட சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய அனுமானம். இதில் அமெரிக்காவின் விருப்பப்படி இந்து மதத் துவேசமும் அடங்கியிருக்கிறது (எனக்கு எந்த மதமும் கிடையாது). நான் இப்படி எழுதுவது இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கத்தான். யோசியுங்கள். விவாதியுங்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாடு தன்னுடைய நலனுக்காக உலகில் எத்தனையோ உயிர்களை பலியாக்கியிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி என் சந்தேகத்தை ஆராயுங்கள்.

Thursday, March 4, 2010

குஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்! சிறுத்தைகளின் ஆசை...


திருச்சியில் நேற்று நடந்த கலைஞர் குடிசைமாற்று வாரிய தொடக்க விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிகுமார், “கலைஞருக்கு கோயில் கட்ட வேண்டும். நாத்திகரான அவர் இதை விரும்பமாட்டார். அவருக்கு இதை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார் (ஆதாரம் நம்தினமதி நாளிதழ்)

இதைப் படித்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை.
வி.சி.கட்சியின் அறிவாளி, எழுத்தாளர் என்றெல்லாம் கூறப்படும் ரவிகுமார், அண்மையில்
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயைப் பற்றி வியந்து வியந்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியிருந்தார். எளிமையான அருந்திராய் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது ரவிகுமாரின எளிமையைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்போது அதுபற்றி நான் பேச வரவில்லை. அருந்ததிராயைப் புகழும் நீங்கள் பத்திரிகைகளில் ஆய்ந்து ஆய்ந்து கட்டுரைகள் எழுதும் நீங்கள் சமூக சீர்திருத்தத்தை எதிர்பார்க்கும் ரவிகுமார், கருணாநிதிக்குக்கோயில் கட்டுவதால் இந்த சமூகத்தில் என்ன மாறுதல் புரட்சி ஏற்பட்டு விடும் என்று கருதுகிறார்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்நோக்கி சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர் கருணாநிதிக்கு கோயில் கட்டச் சொல்வதில் அந்த மக்களின் முன்னேற்றத்தில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது. ரவிகுமார் அவர்களே, நீங்கள் ஒரு பேச்சுக்கு இதை சொல்வதாக இருந்தால் கருணாநிதியை இப்படி நக்கி (மன்னிக்கவும்) புகழ்வது எதற்காக? அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன? குஷ்பு, நமீதாவுக்குக் கோயில் கட்டும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.
ஆனால், புத்தரைப் பற்றி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சதா காலமும் சந்திக்கும் நீங்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை அப்படியே சொல்வதென்றால், அடச்சீ....