Friday, September 11, 2009

ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண், எல்லியன் ஷேண்டர். மருத்துவரான இவர், பேரிடர் காலங்களில் சிக்கிய மக்களை மனச் சிதைவுகளில் இருந்து மீட்கும் பணியில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேவை ஆற்றியுள்ள இவர், தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒபாமா, கிளின்டர் ஆகியோரிடம் அளித்துள்ளார். (அதனால் என்ன பயன் என்று கேட்காதீர்கள்).

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதியும், மனுக்களை திரட்டியும் இணைய தளத்தில் பரப்பி வருகிறார்.

முள்வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள மூன்றரை லட்சம் தமிழர்களின் நிலை குறித்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக இவர் சென்னை வருவதாக இருந்தது. உள்அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனுமதி தராமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா வருவதற்கான இவரது விசாவை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ரத்து செய்துள்ளது..

ஜூலை 16 ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 ம் தேதி வரை செல்லத் தக்க வகையில் விசா அனுமதி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 10 ம் தேதி இவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி நடத்திய சோதனைகளுக்காக வெடித்துக கிளம்பிய இந்திய ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தமிழகம் வர இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டிப்பார்களா?

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களையும் சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்லி வந்ததை இதுவரை கண்டித்து வந்த இந்திய தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் இந்தியாவை கண்டிப்பார்களா? அந்தப் பெண் என்ன தீவிரவாதியா? இல்லை சோனியாவுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள் என்று தேர்தல் பரப்புரை செய்ய வந்தரா?

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்த தமிழகக் காவல்துறை மற்றும் அவரை இந்தியாவுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என்று மறுத்த இந்திய அரசு ஆகியோருக்கு தமிழினத் தலைவர் கருணாநிதி தகுந்த முறையில் பதிலளிப்பாரா?

மனித உரிமையைப் பேணும் ஹிந்து ராம், அ.மார்க்ஸ், போன்றவர்கள் இப்பிரச்னை குறித்து பேசுவார்களா? மனித உரிமை ஆர்வலர் ஒருவர் வருவதைக் கூட அனுமதிக்காத
இந்தியா போன்ற நாட்டில் வாழுவதற்காக நான் கெட்கப்படுகிறேன்.

Wednesday, September 2, 2009

தமிழுக்கு கெட் அவுட் ஹிந்திக்கு கட்அவுட்டா?


சென்னை மயிலையில் ரயில்வே முன்புதிவு மையம் உள்ளது, சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். அந்த முன்பதிவு மையத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்றிருக்கிறார். அப்போது முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழிலேயே விவரங்களைப் பூர்த்தி செய்து அங்குள்ள முன்பதிவு அலுவலகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ஆங்கிலத்திலோ இந்தியிலோ பூர்த்தி செய்து தந்தால்தான் முன்பதிவு செய்தி தருவேன் என்று கறாராக கூறியிருக்கிறார், அந்த அலுவலர்.


அந்த நபருக்கு அருகே அமர்ந்திருந்த அலுவலரும இதையே வழிமொழிந்திருக்கிறார். கடுப்பாகிப் போன அந்த அம்மா தனக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்றும் விண்ணப்பத்தில் உள்ள பெயர்களை நான் கூறுகிறேன் நீங்கள் வேண்டுமானால் அதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து டிக்கெட் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அவரை அவமானப்படுத்தும் வகையில் (அரசு அலுவலகங்களில் என்ன நடக்கும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டுதானே) பேசியிருக்கிறார்கள்.

மனமுடைந்த அவர் தன் வீட்டிக்குச் சென்று தன் கணவரை அழைத்து வந்து

அந்த மையத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருக்கிறார். அதைப் பார்த்த அந்த அலுவலர்கள் மேலும் அந்தப் பெண்ணை திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

பிரச்னைக்குக் காரணம், அந்த முன்பதிவு அலுவலகத்தில் உள்ள முன்பதிவாளர்கள் நான்கு பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். லல்லு ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணியில் சேர்க்கப்பட்டவர்களாம். ஒரே ஒரு தமிழர் மட்டுமே அங்கு முன்பதிவு அலுவலராக உள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்பாளரும் நடந்த விவரத்தை மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி விட்டார். ஆனால் வீணாய் போன தொழில் சங்கத்தினர் அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்து விட்டார்கள்.


பிரச்னை என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு ரயில் டிக்கெட்டைக் கூட தமிழில் பூர்த்தி செய்து எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா? இதே மகாராஷ்டிரத்தில், கேரளத்தில், ஏன் கர்நாடகாவில் இப்படி நடந்திருந்தால், ராஜ் தாக்கரேக்களும், வாட்டாள் நாகராஜன்களும் சும்மா விட்டிருப்பார்களா? தினகரன் நாளிதழில் (அங்கேயும் மொழி உணர்வாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்) மயிலாப்பூர் சம்பவம் பற்றிய செய்தி வெளியானது. அதையாரும் கண்டு கொள்ளவில்லை. பெண் சாமியார் சாராயம் குடித்துக் கொண்டு குறி சொல்கிறாள் என்றால் கவர் ஸ்டோரி வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.


இவர்தான் உங்கள் ஹீரோ என்று எந்த ஹீரோ யாருடன் படுத்தான் என்பதை எழுதி வரும் ஜூனியர் விகடன்களும் இப்பிரச்னையை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஹிந்தியை கட்டாய மொழிப்பாடமாக்க மைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் பாடத்திட்டத்தின் வாயிலாகப் புகுந்து ஒவ்வொரு இடத்திலும் இப்பட கட்டாயமாக ஹிந்தியில் எழுதுங்கள் என்று சொல்லி தமிழை புறந்தள்ள முயல்வார்கள். இதையும் கருணாநிதி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே, மைலாப்பூர் முன்பதிவு மையத்தில் நடந்தது நம் தாய் மொழி மீது திணிக்கப்படும் ஓர் அபாயத்தை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறது.


நண்பர்களே இனி நீங்கள் தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் தமிழிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். அதிலும், ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் மட்டும் பூர்த்தி செய்யுங்கள். அப்போது தான் தமிழன் எவ்வளவு நெஞ்சுரம் படைத்தவன் என்பது டெல்லிக்காரன்களுக்கும், அவனை நம்பிப் பிழைப்பை ஓட்டும் கருணாநிதி வகையறாக்களுக்கும் புரியும். இப்போதைக்கு

தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தது தவறில்லை என்று வாதிட்ட மயிலாப்பூர் லட்சுமிக்கு ஞானி பாணியில் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.


இப்பிரச்னை பற்றி வெகுஜன பத்திரிகைகளில் எழுதும்படி உங்கள் பத்திரிகை நண்பர்களிடம் கோருங்கள் நன்றி.

Tuesday, September 1, 2009

தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பீ தின்னலாம்



இலங்கையில் நடப்பது அப்பட்டமான தமிழின அழிப்பு என்று அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா (கியூபாவும் சேர்ந்து கொண்டது என்பதுதான் ஆச்சரியம்) வாக்களித்தது. இதன்மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய இக்கட்டில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றிவிட்டது, இந்திய அரசு.

இப்படியான சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையளர்கள் என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் இக்கட்டையும் ஏற்படுத்திவிட்டது. தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களைக் கட்டி சுட்டுத்தள்ளுகிறது இலங்கை ராணுவம். இதை வெளியிட்டது, இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஜனநாயத்துக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள்.

அந்த நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவாக மூச்சு விட்டாலே தன் நண்பனாக இருந்தாலும் (உ.ம். லசந்த விக்ரமசிங்க) கொன்றொழித்துவிடுவான், ராஜபக்சே. உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையிலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார்கள், அந்த ஊர் பத்திரிகையாளர்கள். ஆனால் இங்கே.....

அச்சம் என்பது மடமையடா என்ற பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களில் பலரும், இலங்கைத் துணைத் தூதரகம் கொடுக்கும் பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே கொல்லப்பட்ட போது ஒருசில பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை வரவேற்கிறேன்.

இலங்கை அரசுக்கு ஆதாரவாக ஐ.நா.வில் வாக்களித்த இந்திய அரசை கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு இந்த வீடியோ ஆதாரம் மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்தது, நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நிவாரண நிதி என்ற பெயரில் இலங்கைக்கு ஐநூறு கோடி ரூபாய் கொடுத்தது என தமிழகமும், இந்தியாவும் இலங்கையில் நடக்கும் இனஅழிப்புக்குத் துணை போவதை சுட்டிக் காட்ட இதுவே நல்ல சந்தர்ப்பம்.

ஆனால் தமிழகப் பத்திரிகையாளர்கள் இந்த வீடியோ விவரம் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையையும் பதிவு செய்யவில்லை. ஒரு போராட்டம், ஓர் ஆர்ப்பாட்டம் உண்டா? இவர்கள் எல்லாம் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை பீ தின்கிறார்களா?

இப்போது இலங்கைப் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது, இலங்கை நீதிமன்றம். இதை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தியாவோ இலங்கைக்கு கூட்டிக் கொடுக்கிறது. கருணாநிதி அதற்கு விளக்குப் பிடிக்கிறான். அவர்களை செருப்பில் அடித்தால் என்ன? அதற்கு முன்பு முதுகெலும்பு இல்லாத தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் முகத்தில் காறித் துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது.


திஸ்ஸநாயகம் விவகாரத்திலாவது ஒரு போராட்டத்தை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் விரைவில் நடத்தினால் மேற்கண்ட பாராவில் உள்ள என் கண்டனத்தை அந்தப் போராட்ட மேடையிலேயே நான் வாபஸ் பெற்றுக் கொள்வேன். அதுவரையிலும் ம்னதளவில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை காறித்துப்பிக் கொண்டுதான் இருப்பேன்.

பன்றிக் காய்ச்சலை பரபரப்பாக்குகிறார்கள் என்று ஊடகவியலாளர்கள் மீது குறைப்பட்டுக் கொள்ளுபவர்கள் இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டார்களா?

நன்றி

Wednesday, August 12, 2009

தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி




பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.


பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.


இதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.



1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.


2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.


3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.


4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.


5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-?


6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-?


7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.



இதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-?


இப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

Monday, July 20, 2009

அம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிகையாளர்கள் (இனத் துரோகிகள்!)



'நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சீமான் சனியன்று நடத்தியபொதுக் கூட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர் ஒரு கருத்தைவெளியிட்டிருக்கிறார்.


அவர் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழுணர்வுக்கு எதிராக தமிழக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகபத்திரிகையாளர்கள் 24 பேருக்கு தலா ஐந்து பவுன்ப்ரேஸ்லெட்களை (ஆண்கள் அணியும் வளையல்) கடந்த பொங்கல் அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துணைத் தூதர் அம்சா வழங்கியிருக்கிறார்.அதுமட்டுமின்றி பத்திரிகை அலுவலங்களுக்கு தலா இருபது மடிக்கணினிகளையும்வழங்கியிருக்கிறார், அம்சா.


அதில் தினத்தந்தி மட்டுமேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணினிகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது.தினத்தந்தி, தினமணி, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள்மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்உள்ளது என்றும் கஸ்பர் பேசியிருக்கிறார்.



அவர் பேசியதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.24 நிருபர்கள், பத்திரிகையாளர்களுக்கு ப்ரேஸ்லெட்கள்கொடுக்கப்பட்டதுதான். இதைக் கேட்கவே மலத்தைமிதித்தது போன்ற ஒரு அருவறுப்பு ஏற்படுகிறது.அந்த நிருபர்கள் மற்றும் கணினி பெற்றுக் கொண்ட பத்திரிகை அலுவலகங்களின்பட்டியலை வெளியிட்டால்நன்றாக இருக்கும்.


கஸ்பர் நேரடியாக இல்லாவிட்டாலும்மறைமுகமாக அந்தப் பட்டியலை வெளியிட்டால்தமிழர்களுக்கு நம் எதிரிகளை அடையாளம் காட்டியமிகப் பெரிய வேலை வெற்றிகரமாக முடிந்து விடும். செய்வாரா?உங்களில் யாராவது அவரை நேரில் பார்த்தால் என் கோரிக்கை பற்றி சொல்லவும்.

Wednesday, July 15, 2009

''தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்து! இந்தியாவை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கு!!''




வேலு பிரபாகரனின் இளைய மகன் பாலசந்தரனும் இலங்கை ராணுவத்தின் வசம்சிக்கி துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானதை இந்த இதழ் ஜூனியர்விகடனின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருக்கிறது. (கடைசி வரை தானும் தன் குடும்பமும் போர்க்களத்தில் தான் இருப்போம் என்று இறுதிவரை போரிட்ட வேலு பிரபாகரன் போன்ற ஒரு வீரன் எந்த இனத்துக்கும்கிடைக்க மாட்டான் என்றே நினைக்கிறேன்)


தமிழகத்திலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள புலிகளுக்குஎதிரான கருத்தை உடையவர்கள், (மார்க்ஸ் போன்றவர்கள்) புலிகளின் இந்தத் தோல்விக்குக் காரணங்கள் என்னென்ன? அவர்களின்தவறான அணுகுமுறைகள் என்ன-? என்று எழுதிக் கொண்டும்பேசிக்கொண்டும் திரிகிறார்கள். தமிழகத்தில் உள்ள புலிகள்ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் மோசமான வழிகாட்டுதலால்தான் புலிகள் இந்தத் தோல்வியை சந்தித்ததாகபேசுகிறார்கள் மார்க்ஸ் போன்றவர்கள்.



புலிகள் ஆதரவாளர்களோ, புலிகள் மீண்டும் எழுவார்கள்; பிரபாகரனும் வருவார் என்றுபேசிக் கொண்டிருக்கிறார்கள்.



சிங்களவன் ஜெயித்துவிட்டான்; அவனைக் கோபப்படுத்தாமல் இனி தமிழர்கள் அடங்கி, ஒடுங்கிதான்வாழ வேண்டும் என்று தமிழினத் தலைவர்கள் சிலர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் இலங்கைத் தமிழர்களின் புணர்வாழ்வுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டோம்இனி யாரும் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என்கிறது காங்கிரஸ் தலைமையிலானஇந்தியப் பேரரசு.



நான் கேட்பது என்னவென்றால், மே 16 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியானஅன்றிலிருந்து தொடர்ந்து கொத்துக் கொத்ததாக உலகில் வேறு எங்கும்இதுவரை நடந்திராத அளவுக்கு மனிதப் படுகொலைகளை சிங்கள அரசுசெய்திருக்கிறது. இதற்கு முன்னரும் இதே இனப் படுகொலைகளைத்தான்அந்த நாடும், அந்நாட்டில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளும் செய்து வந்தன என்பதும் ஒருபக்கம் இருக்கட்டும்.
போரின் இறுதி நாளில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொல்லிசமாதானக் கொடியுடன் (இந்திய அரசு, ஜ.நா சபை, இலங்கைத் தமிழ் எம்.பிக்கள்,தமிழக அரசியல் புள்ளிகளான கனிமொழி, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்) சரணமடைய வந்த நடேசன் போன்றோர்களை (இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன) ஈவு இரக்கமின்றிசுட்டுக் கொன்றார்கள், சிங்கள ராணுவத்தினர்.



ஓரிரு நாட்களில் 20 ஆயிரம் பேரில் இருந்து (குறைந்தது) 30 ஆயிரம் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வரும்செய்திகள் உறுதி செய்கின்றன. இருப்பினும் இனப் படுகொலைக்கு எதிராக யாரும் எதையும் இங்குப் பதிவு செய்யவே இல்லை. இதில் வைகோ ஆகட்டும், நெடுமாறன் ஆகட்டும், ஏன் மார்க்ஸ் ஆகட்டும்,கருணா(நிதி) ஆகட்டும் எதையும் செய்யவில்லை.


ஆகஸ்ட் 6ம் தேதி தன் நாட்டின் மீது அணுகுண்டு வீசிய தினத்தை ஒவ்வொராண்டும் நினைவு கூர்ந்து அமெரிக்காவுக்கும், போரின் வெற்றியை உயர்த்திப் பிடிக்கும் வல்லரசுகளுக்கும்குற்றஉணர்வை ஏற்படுத்தி வருகிறது ஜப்பான். அதையே இங்கே மனித உரிமை பேசுபவர்களும் தமிழுணர்வை விதைப்பவர்களும் செய்யவில்லை என்பதுதான என் கேள்வி.
இதற்கெல்லாம் விதி விலக்காக, மவுன பேரணி நடத்தி மாபெரும் இனப் படுகொலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்கிறேன்.


ஆக, மாவீரன் முத்துக்குமாரின் தியாகத்தால் ஒன்றிணைந்த இளைஞர்களே! அமைப்புகளே!!


உங்களிடம் கேட்கிறேன். பெண்களையும், குழந்தைகளையும் (பாலசந்திரனையும் சேர்த்துத்தான்) கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்கள அரசுக்கும், அதை ஊக்குவித்த இந்தியப் பேரரசுக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்வோம் வாருங்கள்........

Friday, July 10, 2009

அடப்பாவிகளா?: ஹிந்து ராம் கொடுத்த பேட்டியும் எடுத்த பேட்டியும்!


ஹிந்து பத்திரிகையில் ராஜபக்சேவின் நேர்காணல் வெளிவந்து கொண்டிருக்கிறது.


இங்கு கேள்வி கேட்பவர், ஹிந்துராம். ஜூலை 7ம் தேதி வெளியான பேட்டியில் கேள்வி கேட்க வேண்டிய ஹிந்துராம், ‘‘so you say they (LTTE) were most ruthless most powerful terriorist organisation in the world’’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.


அதற்கு அதிபர் ராஜபக்சே, ‘‘yes, the most ruthless and richest terrorist organisation in the world. And well equipped, well trained’’என்று சொல்லியிருக்கிறார்.


ஆக, ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சொல்லாமல் விட்ட ஒரு விமர்சனத்தை எடுத்துக் கொடுத்து அவர் வாயால் சொல்ல வைத்துப் பதிவு செய்திருக்கிறார்.


இதற்குப் பெயர் தான் ஜெர்னலிசமா? பத்திரிகை தர்மமா? நக்கீரனையும் மற்ற சில பத்திரிகைகளையும் சோ போன்றவர்கள் பொய்யை எழுதுகிறார்கள் என்று சொல்லும் போது இப்படி பேட்டி யெடுக்கும் ஒரு நபரே ஒரு கருத்தைச் சொல்லி அதை பேட்டி கொடுப்பவரின் வாயால் வரவழைப்பது மட்டும் ஒரு சார்பு நிலை இல்லையா? ஜூனியர் விகடனில் ஹிந்து ராம் அவர்களின் பேட்டி இன்று வந்திருக்கிறது.


அவர் இலங்கை ராணுவத்திற்காக கொடி பிடிப்பது ஏன் என்று, நாம் யோசித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரது பேட்டியில் உள்ள சில அபத்தங்களை தோலுரித்துக் காட்டுவது வலைப்பதிவு விதிகளின் படி அதி முக்கியமானதாக இருக்கிறது.


அபத்தம் ஒன்று,


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்று ஜூவி நிருபரின் கேள்விக்கு, ஹிந்து ராம், ‘‘மே 19ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்...’’ என்று பதிலளித் திருக்கிறார். அடுத்ததாக நிருபர் கேட்ட கேள்வி, ‘‘அப்படியானால் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை’’ என்று கேட்கிறார்.


அதற்கு பதிலளித்துள்ள ராம், ‘‘அவர் நாடாளு மன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார். அதுதான் மகா அபத்தமாக உள்ளது. அதாவது, பிரபாகரன் என்று ஒரு சடலம் காட்டப்பட்டது, மே 19ம் தேதி என்பது சரியான தகவல்தான்.


ஆனால் அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், ராஜபக்சே.


நாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரையாற்றும்போது பிரபாகரனை ராணுவம் கொன்றுவிட்டதாக சொல்லப்படுவது குறித்து ஏதாவது பேசுகிறாரா என்று, உலகம் முழுவதும¢ லட்சக்கணக்கான தமிழர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான நிலையில்தான் அவர் பேசவில்லை. நாடாளுமன்ற உரையில் பிரபாகரன் பற்றி ராஜபக்சே ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் ஏற்கெனவே எழுதிவிட்டார்.


ஒரே குட்டையில் ஊறிய ராமும் ராகவனும் இப்படி மாறி மாறி கருத்து சொல்வது சரியா? உங்களுக்கு எதைப் பங்கு போடுவதில் சிக்கல்?உண்மைக்குப் புறம்பாக ஹிந்து ராம் மே 19ம¢ தேதிக்கு முன்னதாகவே ராஜபக்சே நாடாளு மன்றத்தில் உரையாற்றியது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்தியத் தேர்தல் முடிவு வெளியானது 16ம் தேதி. நடேசன் இறந்து விட்டதாக தகவல் வெளியானது 17ம் தேதி.


சார்லஸ் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது, 18ம் தேதி. பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியானது, 19ம் தேதி. அதன்பின் போர் முடிந்தது என்றுதான் நாடாளுமன்றம் கூடியது. இதுகூடவா தெரியவில்லை அந்த ராமுவுக்கு.


இரண்டாவது அபத்தம்.


‘‘பிரபாகரனின் மறைவுக்குப் பின்னால் அங்கிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள இலங்கைக்குச் சென்றேன்‘‘ என்கிறார், அந்தப் பேட்டியில் ராம்.


ஆனால் மற்றொரு கேள்விக்கு, ‘‘முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அவர்களிடம் (தமிழ்மக்களிடம்) பேசினால் இரண்டு பேருக்குமே தர்ம சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் அங்கிருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை’’ என்கிறார்.


இதில் என்ன அபத்தம் என்கிறீர்களா? இருக்கிறது. மக்களின் நிலை குறித்து அறியச் சென்றவர், அந்த மக்களிடம் பேசாமல் (அதுவும் ராணுவத்தினருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்பதற்காக பேசாமல்) திரும்பியிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இருந்து தலைவரைப் பேட்டி எடுக்கச் செல்லும் ஒரு நிருபர் அந்தத் தலைவருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்று முக்கியமான கேள்விகளைக் கேட்காமல் வருவாரா? வந்தால் அதை ஹிந்து ராம் வரவேற்பாரா?ஹிந்துவை தூக்கிப் பிடிப்பவர் நீங்கள் என்றால் அந்த நிலைப்பாட்டை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.