Saturday, April 3, 2010

ஐந்து நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை




எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக நான் பதிவெழுதுவதில்லை.அதே நேரத்தில்
எழுதத்தூண்டும் நேரங்களில் எல்லாம் எழுதிவிடுவதும் இல்லை. எழுதியே ஆக வேண்டும்
என்ற தாக்கமும், அதற்குரிய நேரமும் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன்.
ரொம்ப நாட்களாக புதிய தலைமைச் செயலகம் பற்றிய என்னுடைய எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

புதிய சட்டப் பேரவை கட்டடம் பற்றிய நிறைய விடங்கள் உண்டு. ஆனால், நான் பேசப் போவது அதில் உள்ள சட்டம் தொடர்பான ஒரு பிரச்னையைப் பற்றி. அதாவது ஒரு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், அந்த இடத்தில் இப்படித்தான் அந்தக் கட்டடம் இருக்கும் என்ற ப்ளானைக் காட்டி (அப்ரூவல்) அங்கீகாரம் பெற்று கட்டடத்தைக் கட்ட வேண்டும். பெரும்பாலும் அங்கீகாரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் ப்ளான்படி யாரும் கட்டடம் கட்டுவது கிடையாது. அப்படி கட்டவும் முடியாது. ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ள ஒழுங்குமுறைப்படி கட்டடம் கட்டுவதில் நிறைய பிரச்னைகள் உண்டு. (ஒரு கட்டடத்திற்குள் வந்து போகும் மக்களின் நலனுக்காகவே இதுபோன்ற சட்ட கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்)

சென்னைத் தலைமைச் செயலகக் கட்டடத்திற்கும் இதேபோல் ப்ளான் அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட்ட நாள் 8.3.2010 (அரசாணை எண் MS. NO: 54) ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்பிங் டிபார்ட்மென்ட் சார்பில் அரசாணை வெளியிட்டு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான ப்ளானை அப்ரூவல் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஆனால் இந்த அரசாணை வழங்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது, 13.3.2010. அதாவது ஐந்து நாட்களில் அந்த ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்திருக்கிறார்களாம். நடந்தது என்னவென்றால், ப்ளான் அப்ரூவலுக்கு முன்பே அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமீறல்.

இன்னும் கட்டுமானப்பணி நடக்கிறதென்றால், கட்டி முடிக்காத கட்டடத்தில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே செயல்பட்டு வந்த கோட்டையிலிருந்து இவ்வளவு அவசரமாக காலி செய்து இங்கே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய காரணங்கள் என்ன? ப்ளானிங் அப்ரூவல் இன்றியே ஏழு மாடிக் கட்டடத்தை கட்டி முடிக்க இந்த அரசு சட்ட மீறலை செய்திருக்கிறது. அதுவும் சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தைக் கட்டவே சட்டமீறல் என்றால், அவர்களுக்கு சட்டமியற்ற என்ன அருகதை இருக்கிறது. சட்டத்தை மீறும் இவர்கள் எப்படி சட்டப்படியான நியாயப்படியான அரசை நடத்த அருகதை பெற்றவர்கள் ஆவார்.

பழைய வாடகை கட்டடத்தில் இருந்து சொந்தமான கட்டடத்திற்கு சட்டப் பேரவையைக் கொண்டு வர வேண்டும் என்றால் முறைப்படி, சட்டப்படி உரிய அனுமதி பெற்று ப்ளான் அப்ரூவல் வாங்கி கட்டடம் கட்ட வேண்டியதுதானே. அதற்குள் அவசரம் வேண்டியிருக்கிறது. நாளைக்கே தீவிரவாதிகள் உள்ளே புகுந்து (மும்பை தாஜ் ஹோட்டல் போல்) தாக்குதல் நடத்தினால் இந்தக் கட்டடத்திற்கான உரிய வரைப்படம் (ப்ளான்) இல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடியும்.

(பி.கு) நள்ளிரவில் தன்னைக் கைது செய்து கொண்டுவரப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலக
வளாகத்தை இடித்துத்தான் புதிய சட்டப் பேரவையைக் கட்டியிருக்கிறார், கலைஞர்.

அதேபோல் தன்னை அடைத்து வைத்திருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்குக் கொண்டு சென்று விட்டு, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் அந்த இடத்தில் அரசு மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.

1 comment:

  1. சிறந்த பதிவு, தேவையான பதிவு,...

    பொது நோக்கு துளியும் இன்றி சொந்த விருப்பு-வெருப்பிற்காகவே அரசியல் நடத்துபவர் கருணாநிதி. அவர் சிரித்தால் மக்கள் சரிக்க வேண்டும். அவர் அழுதால் மக்கள் அழவேண்டும்.

    இதையும் கொஞ்சம் படியுங்கள்...

    ஏன் இந்த அவசரம்?

    http://seeprabagaran.blogspot.com/2010/03/blog-post_233.html

    ReplyDelete