Wednesday, January 27, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் செம்மை பதிப்பகத்தின் முத்துக்குமார் வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு‘!




பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என இன்றைய தலைமுறை இளைஞர்கள் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை முத்துக்குமாரின் தீக்குளிப்பு மறுஆய்வு செய்யத் தூண்டியிருக்கிறது. தன்னுடைய தலைவனுக்காக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல்பாட்டோடு முத்துக்குமாரின் தீக்குளிப்பைப் பொறுத்திப் பார்ப்பது அபத்தம். சாவதற்கு முன் அவர் விநியோகித்த துண்டறிக்கையில் இருந்த அவரது அரசியல் அறிவின் வீச்சை 26 வயது இளைஞரிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களை சமூகப் போராளியாக மாற்றவன் முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலத்தில் கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் வரை திரண்ட உணர்வாளர்களின் எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராதது. பேரழிவு ஆயுதங்களால் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்திய நாடுகளை உலுக்கியது இவரது அரசியல் அறிக்கை. தமிழகத்தையே பதற வைத்த இந்த முத்துக்குமார் யார்? தமிழ் இனத்தின் நலன்களுக்காக வேரோடு தன்னைக் கொடுத்த இந்த விருட்சம் எங்கிருந்து வந்தது? பெருமரமென ஓங்கி வளர்வதற்கு முன் விதையாய் இருந்த நாளில் அது கடந்து வந்த பாதை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையாய் வெளிவந்திருக்கிறது, முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச் சீட்டு‘

‘என் உடலையே துருப்புச்சீட்டாக்கிப் போராடுங்கள்’ என்று உலகில் வேறு எவரும் இதற்கு முன்பு அறிவித்ததாக வரலாறு இல்லை. எனவே, இதைவிட வேறொரு தலைப்பு, இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை. செம்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், ஜனவரி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடந்தாண்டு இதே நாளில்தான் (ஜனவரி 29–ம் தேதி) தமிழின அழிப்பை எதிர்த்து உயிர்க்கொடை செய்தார், முத்துக்குமார்.

தொடர்புக்கு

செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774

No comments:

Post a Comment