Saturday, November 14, 2009

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!





அந்தப் (கவிதை) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் போயிருக்கவே கூடாது. போனதோடு நிறுத்தியிருக்கலாம்.
அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. அதோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டிய போதே எனக்கு வந்த ஆத்திரம், அதைப் படித்தும் ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பும், ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் இணைந்து, ‘ஈழம் மௌனத்தின் வலி‘ என்ற புத்தகத்தை அந்த நிகழ்வில் வெளியிட்டனர். தமிழ் மக்கள் ஈழத்தில் துடிதுடித்து செத்துப் போனதை படம் போட்டுக் காட்டி அந்தப் படங்களுக்குப் பொருத்தமான கவிதைகளை பிரபலங்களிடம் வாங்கித் தொகுத்திருக்கிறார்கள். கமல் முதல் ரஜினி வரை கவிதை எழுதியிருக்கிறார்கள். (இன்னும் நீங்கள் எதிர்பாராத பலரும் இதில் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்)

சனிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவக்குமார், சூர்யா, இயக்குநர்கள், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஜகிவாசுதேவ் கலந்து கொண்டார். அக்டோபரில் ஆரம்பித்து படிப்படியாக உக்கிரம் அடைந்த போரில் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. திடீரென இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த மனிதநேயம் முளைத்தது?

தமிழீழ விடுதலைப் புலிகளை சிலாகித்து நக்கீரன் பத்திரிகையில் எழுதிக் கொண்டே, ‘புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல. அவர்களுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை’ என்று பேசிவரும் ஜெகத் கஸ்பர் இந்த நிகழ்ச்சியின் நாயகன்! ஈழம் பற்றி பேசுபவர்கள் புலிகளை விமர்சிக்கக் கூடாது என்பது அல்ல என் வாதம். கஸ்பர் எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்பதே என் கேள்வி.

புலம் பெயர்ந்தவர்கள், சிறிதேனும் இயக்கத் தொடர்பு உள்ளவர்களுக்கு இந்த கஸ்பர் யாரென்று பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்ததுதான். ஆனால், தமிழ்நாட்டில் ஈழஅவலத்தை முதல் முறையாகக் கண்டு கொதித்துப் போன (என்னைப் போன்ற) இந்தத் தலைமுறையினரை இந்திய அரசுக்கு ஆதரவான ஆட்களாக ஆக்குவதுதான் கஸ்பருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி. நக்கீரன் இதழ் மூலம் அதை நன்றாகவே செய்கிறார், கஸ்பர்.

நக்கீரனில் தொடரும் பணியை அடுத்தத் தளத்துக்கு விரைவுப்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. மருத்துவர் எழிலன் தன் நன்றியுரையில், ‘கழிவு நீரும் குடிநீரும் கலந்து வரும் தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கும் மக்களுக்காக மழைநீரைப் (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது) பொருட்படுத்தாமல் வந்த உங்களுக்கு நன்றி’ என்றார். முள்வேலி முகாமில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தன் நெருங்கிய தோழி கனிமொழி சொன்னதை மறந்துவிட்டாரா? ‘இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு! வாழ்க தலைவர் கலைஞர்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்தது, பாவம் எழிலனுக்குத் தெரியாது போலும். (பிரபாகரனுக்கு முட்டாள். கலைஞரைப் பாருங்கள், வெறும் நான்கே நாட்களில் அந்த மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டார்) எழிலன் அவர்களே, குறைந்தபட்சம், மருத்துவத் தொழிலையாவது மனச்சாட்சியோடு செய்யுங்கள்.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில், போலீஸ் கிளைமாக்ஸில் வருவது போல, போர் முடிந்து இனஅழிப்பு முடிந்து முனங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வந்திருக்கிறார்கள் இந்த போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள். இந்த அமைப்பின் அமைப்பாளர் த.செ.ஞானவேல் இத்தனை நாள் எங்கே இருந்தார்? பிரகாஷ்ராஜின் விவகாரத்து வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்தாரா?

‘ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் சேர்ந்துதான் புத்தகம் வெளியிடுகிறது என்பதை மறைத்து என்னிடம் கவிதை வாங்கி பிரசுரித்திருக்கிறார்கள்’ என்று இயக்குநர் சீமான் சீறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு இப்போது புத்தகம் வெளியிட்டு அதற்கு நூறு ரூபாய் விலை வேறு. அதில், ‘மனித நேயர் எவரும் மறுபதிப்பு செய்யலாம்‘ என்று பெருந்தன்மையான விளக்கம் வேறு. (அடுத்தவர்களிடம் ஓசியில் எழுதி வாங்கிக் கொண்டு அதற்கு காப்பி ரைட் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள், போலும்!)

இப்படியொரு புத்தகம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? எதற்காக செய்தார்கள்? எதை மறைக்க இப்படி செய்கிறார்கள்? கலைஞரைத் திட்டக் கூடாது, இந்திய அரசை திட்டக் கூடாது, போராடக் கூடாது, ஆனால் ஈழ மக்களை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுதானே கஸ்பர் அன்கோவின் விருப்பம். இந்திய அரசு அவருக்கு இட்டிருக்கும் பணி.
ஈழ மக்களின் துயரம் குறித்து பேச முயன்ற மனித உரிமை ஆர்வலரான அமெரிக்கப் பெண் எல்லின் ஷேண்டருக்கு தமிழ்நாட்டில் நுழையவே தடை விதித்தார்கள். அந்தப் பெண்ணின் பேச்சை வீடியோவில் கூட ஒளிபரப்பக் கூடாது என்றது, கலைஞர் அரசு. ஆனால் கஸ்பர் விழாவுக்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராஜமரியாதை. இதில் இருந்தே தெரிய வேண்டாமா? யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்று.

‘நம் தொப்புள் கொடி உறவுகள் மீது இனஅழிப்பைப் போரை இந்தியாதான் முன்னின்று நடத்துகிறது’ என்று தொடக்கத்தில் இருந்து கடுமையாக பேசிவரும் கவிஞர் தாமரை போன்ற ஒரு சிலரின் பங்களிப்பும் இந்தப் புத்தகத்தில் உண்டு. அவர்கள் யாரும் என்னுடைய இந்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. (உன்னை போல் ஒருவன் படத்தில், ‘தமிழ்நாட்டு மக்கள் ராஜீவ் காந்தி படுகொலையையும், மீனம்பாக்கம் குண்டு வெடிப்பையும் மறந்து விட்டார்கள்’ என்று வாய் கிழிய பேசிய கமலின் கவிதை இந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனையான ஒன்று) கஸ்பர் அய்யா, எழிலன் அய்யா, போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களே.. மனதில் கொஞ்சமேனும் மனிதமும், ஆண்மையும், தைரியமும் இருந்தால் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசை கண்டித்து ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.. உங்களால் முடியவே முடியாது. குமுதம் இணையதளத்தில் அண்மையில் ஜெகத் கஸ்பர் சொன்னதை உங்களை எல்லாம் பார்த்துச் சொல்கிறேன்.. இந்தப் பிழைப்புப் பிழைப்பதைவிட விபசாரம் செய்யலாம்..அடத்தூ..

Thursday, October 1, 2009

இலங்கை தூதர் அளித்த விருந்தில் மானங்கெட்ட சென்னை பத்திரிகையாளர்கள்....


தென்னிந்தியாவுக்காக இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இன்று (1.10.09) பிற்பகல் மூன்று மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், பங்கேற்ற பத்திரிகையாளரும் எனது நண்பருமான ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை உங்களிடம் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவே இந்த சந்திப்புக்கு தூதரகம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள தூதரக அலுவலகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்துவிட்டனர். இரு பெண்கள், மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் கிருஷ்ணமூர்த்தி பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார்.
முதலில் பத்திரிகையாளர்களுடனான தன்னுடைய நல்லுறவு நீடூழி வாழ வேண்டும் என்று சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் கேட்டுக்கொண்டாராம்.

இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் பல்வேறு பத்திரிகை செய்திகளைத் தொடர்ந்து, இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டறிந்தேன். அதில் இந்திய, இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவை கெடுக்கவே சிலர் திட்டமிட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக செய்திகளைப் பரப்புகின்றனர். பத்திரிகைகளும் ஆதாரமற்ற செய்திகளை பிரசுரிக்கின்றன என்றாராம். (மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டார்களா?) .


இலங்கை கடற்படையினர் யாரும் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லையாம். யாரையும் தாக்கவில்லையாம். ( இன்னும்மா இந்த ஊரு இவனுகள நம்பிக்கிட்டு இருக்கு..)

கச்சத் தீவில் உள்ள அந்தோனியர் கோவிலுக்குப்போகவும் மீன் வலைகளை உலர்த்தவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா? என்று நிருபர்கள் கேட்க.. அதுபற்றி உங்கள் அரசிடம் கேளுங்கள் என்றாராம் திமிருடன்.. எங்கள் அரசு இருக்கிறது என்கிறது.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று திரும்ப நிருபர்கள் கேட்க அவனிடம் பதில்லை.. (செருப்பால் அடிக்கணும் ).

இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விட (நானூற்றி சொற்பம்) இலங்கை சிறையில் இருக்கும் (நூற்றி இருபது பேராம்) இந்திய மீனவர்களின் எண்ணிக்கைக் குறைவு என்றெல்லாம் பேசியிருக்கிறார். (இந்த எண்ணிக்கையை சமன் செய்யத்தான் இப்படி ரத்தவெறியோட ஆடுகின்றனவா இந்த சிங்கள நாய்கள்?)

அத்துமீறி வரும் மீனவர்களையும் பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் நடத்துகிறார்களாம். அப்படியென்றால் மீனவர்கள் தாங்களே தங்கள் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக கரைக்குத் திரும்பினார்களா என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
நிருபர்கள் இடையில் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மாறாக டென்ஷனில் அவரது கைகள் நடுங்கின. தொடர்ந்து பேசமுடியாமல் வார்த்தைகள் தட்டுத் தடுமாறின.
இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய எங்களை அங்கு அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று நிருபர்கள் கேட்டதும், இறையாண்மை உள்ள இலங்கை நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் அதிபராக மகிந்த ராஜபக்சே உள்ளார். அவர் எந்தவிதமான பாரபட்சம் இன்றி ஆட்சி செய்கிறார். உண்மை இப்படியிருக்கையில் நீங்கள் அங்கு வந்து பார்க்க அது என்ன மிருகக் காட்சி சாலையா? என்று கேட்டாராம்.
இதை அப்படியே தமிழில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் கேட்க அப்படியே மொழிபெயர்த்தார். தொடர்ந்து பத்திரிகை யாளர்கள் இதையே தொடர்ந்து கேட்க, வேறு வழியின்றி உங்கள் நிறுவனம் மூலமாக கடிதம் கொடுங்கள் எங்களை எங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து பதில் சொல்கிறேன்.. என்று ஒரே போடாகப் போட்டாராம்.
ரஜினி விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றதாக அவதூறு பரப்பிய உங்கள் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டதும், இதையேன் என்னிடம் கேட்கறீர்கள்.. அந்த அமைச்சரிடமே கேளுங்கள் என்றாராம். (அப்புறம் என்னக் கூ....க்கு அவன் பிரஸ்மீட் வைத்தான் என்று கேட்காதீர்கள்)
தொடர்ந்து நிருபர்களை கேள்வி கேட்க விடாமல் பேசிக் கொண்டே இருந்தார் வ.கிருஷ்ணமூர்த்தி. அப்போது என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.. வேலை நிமித்தமாக இருக்க வேண்டும் என்பதில்லை.. சாதாரணமாகவே என்னிடம் பேசுங்கள் நான் எப்போதும் உங்களிடம் பேச ஆர்வமாக இருக்கிறேன் என்று போட்டாரே ஒரு பிட்டு.. (அம்சா இடத்தைப் பிடித்துவிட்டார். இதற்காகத் தானே நம் பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.)

ஒரு வழியாக நிருபர்கள் சந்திப்பை முடித்துக் கொள்வதாக அறிவித்த அவரிடம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று எப்போது அதிகாரப் பூர்வமாக அறிவிப்பீர்கள் என்று கேட்டார் ஒரு நிருபர்..(அவர் தான் அதிகக் கேள்விகளைக் கேட்ட நிருபர்)...
உடனே தன் அருகில் இருந்த தூதரக அலுவலர்களிடம் ஏதோ கிசுகிசுத்தாராம். அதைப் பார்த்து நிருபர்கள் சிரித்துவிட்டார்களாம். அடுத்து, சில வினாடிகளுக்குப் பின் நிருபர்களைப் பார்த்து என்னைப் பொறுத்த வரையில், அவர் உயிருடன் இல்லை என்று பதிலளித்தார்.

இப்படி படுசூடாக போன இந்த சந்திப்பு முடிந்ததும், எனது நண்பரும் அவரது போட்டோகிராபரும் அந்த அறையில் இருந்து வெளியே வர, அங்கே மிகப்பெரிய விருந்துக்கு உண்டான ஏற்பாடுகள் இருந்ததாம். நண்பரும் போட்டோகிராபரும் வெளியே வந்து ஐந்து நிமிடங்கள் வரை காத்திருந்தும் எந்த நிருபரும் வெளியே வரவே இல்லை.. ஆக விருந்து களைகட்டியிருக்கும்... இன்னொரு அம்சா வந்தே விட்டார். இனி... மீனவர்கள் செத்தாலும் செய்தி வராது..

அடத்தூ........

Friday, September 11, 2009

ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண், எல்லியன் ஷேண்டர். மருத்துவரான இவர், பேரிடர் காலங்களில் சிக்கிய மக்களை மனச் சிதைவுகளில் இருந்து மீட்கும் பணியில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேவை ஆற்றியுள்ள இவர், தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒபாமா, கிளின்டர் ஆகியோரிடம் அளித்துள்ளார். (அதனால் என்ன பயன் என்று கேட்காதீர்கள்).

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதியும், மனுக்களை திரட்டியும் இணைய தளத்தில் பரப்பி வருகிறார்.

முள்வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள மூன்றரை லட்சம் தமிழர்களின் நிலை குறித்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக இவர் சென்னை வருவதாக இருந்தது. உள்அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனுமதி தராமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா வருவதற்கான இவரது விசாவை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் ரத்து செய்துள்ளது..

ஜூலை 16 ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 ம் தேதி வரை செல்லத் தக்க வகையில் விசா அனுமதி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 10 ம் தேதி இவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி நடத்திய சோதனைகளுக்காக வெடித்துக கிளம்பிய இந்திய ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தமிழகம் வர இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டிப்பார்களா?

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களையும் சர்வதேச பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்லி வந்ததை இதுவரை கண்டித்து வந்த இந்திய தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் இந்தியாவை கண்டிப்பார்களா? அந்தப் பெண் என்ன தீவிரவாதியா? இல்லை சோனியாவுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள் என்று தேர்தல் பரப்புரை செய்ய வந்தரா?

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்த தமிழகக் காவல்துறை மற்றும் அவரை இந்தியாவுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என்று மறுத்த இந்திய அரசு ஆகியோருக்கு தமிழினத் தலைவர் கருணாநிதி தகுந்த முறையில் பதிலளிப்பாரா?

மனித உரிமையைப் பேணும் ஹிந்து ராம், அ.மார்க்ஸ், போன்றவர்கள் இப்பிரச்னை குறித்து பேசுவார்களா? மனித உரிமை ஆர்வலர் ஒருவர் வருவதைக் கூட அனுமதிக்காத
இந்தியா போன்ற நாட்டில் வாழுவதற்காக நான் கெட்கப்படுகிறேன்.

Wednesday, September 2, 2009

தமிழுக்கு கெட் அவுட் ஹிந்திக்கு கட்அவுட்டா?


சென்னை மயிலையில் ரயில்வே முன்புதிவு மையம் உள்ளது, சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். அந்த முன்பதிவு மையத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்றிருக்கிறார். அப்போது முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழிலேயே விவரங்களைப் பூர்த்தி செய்து அங்குள்ள முன்பதிவு அலுவலகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ஆங்கிலத்திலோ இந்தியிலோ பூர்த்தி செய்து தந்தால்தான் முன்பதிவு செய்தி தருவேன் என்று கறாராக கூறியிருக்கிறார், அந்த அலுவலர்.


அந்த நபருக்கு அருகே அமர்ந்திருந்த அலுவலரும இதையே வழிமொழிந்திருக்கிறார். கடுப்பாகிப் போன அந்த அம்மா தனக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்றும் விண்ணப்பத்தில் உள்ள பெயர்களை நான் கூறுகிறேன் நீங்கள் வேண்டுமானால் அதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து டிக்கெட் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அவரை அவமானப்படுத்தும் வகையில் (அரசு அலுவலகங்களில் என்ன நடக்கும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டுதானே) பேசியிருக்கிறார்கள்.

மனமுடைந்த அவர் தன் வீட்டிக்குச் சென்று தன் கணவரை அழைத்து வந்து

அந்த மையத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருக்கிறார். அதைப் பார்த்த அந்த அலுவலர்கள் மேலும் அந்தப் பெண்ணை திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

பிரச்னைக்குக் காரணம், அந்த முன்பதிவு அலுவலகத்தில் உள்ள முன்பதிவாளர்கள் நான்கு பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். லல்லு ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணியில் சேர்க்கப்பட்டவர்களாம். ஒரே ஒரு தமிழர் மட்டுமே அங்கு முன்பதிவு அலுவலராக உள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்பாளரும் நடந்த விவரத்தை மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி விட்டார். ஆனால் வீணாய் போன தொழில் சங்கத்தினர் அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்து விட்டார்கள்.


பிரச்னை என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு ரயில் டிக்கெட்டைக் கூட தமிழில் பூர்த்தி செய்து எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா? இதே மகாராஷ்டிரத்தில், கேரளத்தில், ஏன் கர்நாடகாவில் இப்படி நடந்திருந்தால், ராஜ் தாக்கரேக்களும், வாட்டாள் நாகராஜன்களும் சும்மா விட்டிருப்பார்களா? தினகரன் நாளிதழில் (அங்கேயும் மொழி உணர்வாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்) மயிலாப்பூர் சம்பவம் பற்றிய செய்தி வெளியானது. அதையாரும் கண்டு கொள்ளவில்லை. பெண் சாமியார் சாராயம் குடித்துக் கொண்டு குறி சொல்கிறாள் என்றால் கவர் ஸ்டோரி வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.


இவர்தான் உங்கள் ஹீரோ என்று எந்த ஹீரோ யாருடன் படுத்தான் என்பதை எழுதி வரும் ஜூனியர் விகடன்களும் இப்பிரச்னையை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஹிந்தியை கட்டாய மொழிப்பாடமாக்க மைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் பாடத்திட்டத்தின் வாயிலாகப் புகுந்து ஒவ்வொரு இடத்திலும் இப்பட கட்டாயமாக ஹிந்தியில் எழுதுங்கள் என்று சொல்லி தமிழை புறந்தள்ள முயல்வார்கள். இதையும் கருணாநிதி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே, மைலாப்பூர் முன்பதிவு மையத்தில் நடந்தது நம் தாய் மொழி மீது திணிக்கப்படும் ஓர் அபாயத்தை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறது.


நண்பர்களே இனி நீங்கள் தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் தமிழிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். அதிலும், ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் மட்டும் பூர்த்தி செய்யுங்கள். அப்போது தான் தமிழன் எவ்வளவு நெஞ்சுரம் படைத்தவன் என்பது டெல்லிக்காரன்களுக்கும், அவனை நம்பிப் பிழைப்பை ஓட்டும் கருணாநிதி வகையறாக்களுக்கும் புரியும். இப்போதைக்கு

தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தது தவறில்லை என்று வாதிட்ட மயிலாப்பூர் லட்சுமிக்கு ஞானி பாணியில் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.


இப்பிரச்னை பற்றி வெகுஜன பத்திரிகைகளில் எழுதும்படி உங்கள் பத்திரிகை நண்பர்களிடம் கோருங்கள் நன்றி.

Tuesday, September 1, 2009

தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பீ தின்னலாம்



இலங்கையில் நடப்பது அப்பட்டமான தமிழின அழிப்பு என்று அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா (கியூபாவும் சேர்ந்து கொண்டது என்பதுதான் ஆச்சரியம்) வாக்களித்தது. இதன்மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய இக்கட்டில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றிவிட்டது, இந்திய அரசு.

இப்படியான சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையளர்கள் என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம், உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடும் இக்கட்டையும் ஏற்படுத்திவிட்டது. தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களைக் கட்டி சுட்டுத்தள்ளுகிறது இலங்கை ராணுவம். இதை வெளியிட்டது, இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஜனநாயத்துக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள்.

அந்த நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவாக மூச்சு விட்டாலே தன் நண்பனாக இருந்தாலும் (உ.ம். லசந்த விக்ரமசிங்க) கொன்றொழித்துவிடுவான், ராஜபக்சே. உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலையிலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறார்கள், அந்த ஊர் பத்திரிகையாளர்கள். ஆனால் இங்கே.....

அச்சம் என்பது மடமையடா என்ற பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களில் பலரும், இலங்கைத் துணைத் தூதரகம் கொடுக்கும் பிச்சைக் காசுக்கு ஆசைப்பட்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பத்திரிகையாளர் லசந்தே கொல்லப்பட்ட போது ஒருசில பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை வரவேற்கிறேன்.

இலங்கை அரசுக்கு ஆதாரவாக ஐ.நா.வில் வாக்களித்த இந்திய அரசை கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு இந்த வீடியோ ஆதாரம் மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்தது, நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நிவாரண நிதி என்ற பெயரில் இலங்கைக்கு ஐநூறு கோடி ரூபாய் கொடுத்தது என தமிழகமும், இந்தியாவும் இலங்கையில் நடக்கும் இனஅழிப்புக்குத் துணை போவதை சுட்டிக் காட்ட இதுவே நல்ல சந்தர்ப்பம்.

ஆனால் தமிழகப் பத்திரிகையாளர்கள் இந்த வீடியோ விவரம் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையையும் பதிவு செய்யவில்லை. ஒரு போராட்டம், ஓர் ஆர்ப்பாட்டம் உண்டா? இவர்கள் எல்லாம் சோற்றைத் தின்கிறார்களா? இல்லை பீ தின்கிறார்களா?

இப்போது இலங்கைப் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது, இலங்கை நீதிமன்றம். இதை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்தியாவோ இலங்கைக்கு கூட்டிக் கொடுக்கிறது. கருணாநிதி அதற்கு விளக்குப் பிடிக்கிறான். அவர்களை செருப்பில் அடித்தால் என்ன? அதற்கு முன்பு முதுகெலும்பு இல்லாத தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் முகத்தில் காறித் துப்ப வேண்டும் என்று தோன்றுகிறது.


திஸ்ஸநாயகம் விவகாரத்திலாவது ஒரு போராட்டத்தை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் விரைவில் நடத்தினால் மேற்கண்ட பாராவில் உள்ள என் கண்டனத்தை அந்தப் போராட்ட மேடையிலேயே நான் வாபஸ் பெற்றுக் கொள்வேன். அதுவரையிலும் ம்னதளவில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களை காறித்துப்பிக் கொண்டுதான் இருப்பேன்.

பன்றிக் காய்ச்சலை பரபரப்பாக்குகிறார்கள் என்று ஊடகவியலாளர்கள் மீது குறைப்பட்டுக் கொள்ளுபவர்கள் இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டார்களா?

நன்றி

Wednesday, August 12, 2009

தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி




பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.


பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.


இதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.



1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.


2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.


3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.


4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.


5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-?


6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-?


7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.



இதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-?


இப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

Monday, July 20, 2009

அம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிகையாளர்கள் (இனத் துரோகிகள்!)



'நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சீமான் சனியன்று நடத்தியபொதுக் கூட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர் ஒரு கருத்தைவெளியிட்டிருக்கிறார்.


அவர் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழுணர்வுக்கு எதிராக தமிழக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகபத்திரிகையாளர்கள் 24 பேருக்கு தலா ஐந்து பவுன்ப்ரேஸ்லெட்களை (ஆண்கள் அணியும் வளையல்) கடந்த பொங்கல் அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துணைத் தூதர் அம்சா வழங்கியிருக்கிறார்.அதுமட்டுமின்றி பத்திரிகை அலுவலங்களுக்கு தலா இருபது மடிக்கணினிகளையும்வழங்கியிருக்கிறார், அம்சா.


அதில் தினத்தந்தி மட்டுமேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணினிகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது.தினத்தந்தி, தினமணி, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள்மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்உள்ளது என்றும் கஸ்பர் பேசியிருக்கிறார்.



அவர் பேசியதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.24 நிருபர்கள், பத்திரிகையாளர்களுக்கு ப்ரேஸ்லெட்கள்கொடுக்கப்பட்டதுதான். இதைக் கேட்கவே மலத்தைமிதித்தது போன்ற ஒரு அருவறுப்பு ஏற்படுகிறது.அந்த நிருபர்கள் மற்றும் கணினி பெற்றுக் கொண்ட பத்திரிகை அலுவலகங்களின்பட்டியலை வெளியிட்டால்நன்றாக இருக்கும்.


கஸ்பர் நேரடியாக இல்லாவிட்டாலும்மறைமுகமாக அந்தப் பட்டியலை வெளியிட்டால்தமிழர்களுக்கு நம் எதிரிகளை அடையாளம் காட்டியமிகப் பெரிய வேலை வெற்றிகரமாக முடிந்து விடும். செய்வாரா?உங்களில் யாராவது அவரை நேரில் பார்த்தால் என் கோரிக்கை பற்றி சொல்லவும்.