Saturday, April 3, 2010

ஐந்து நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை




எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக நான் பதிவெழுதுவதில்லை.அதே நேரத்தில்
எழுதத்தூண்டும் நேரங்களில் எல்லாம் எழுதிவிடுவதும் இல்லை. எழுதியே ஆக வேண்டும்
என்ற தாக்கமும், அதற்குரிய நேரமும் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன்.
ரொம்ப நாட்களாக புதிய தலைமைச் செயலகம் பற்றிய என்னுடைய எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

புதிய சட்டப் பேரவை கட்டடம் பற்றிய நிறைய விடங்கள் உண்டு. ஆனால், நான் பேசப் போவது அதில் உள்ள சட்டம் தொடர்பான ஒரு பிரச்னையைப் பற்றி. அதாவது ஒரு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், அந்த இடத்தில் இப்படித்தான் அந்தக் கட்டடம் இருக்கும் என்ற ப்ளானைக் காட்டி (அப்ரூவல்) அங்கீகாரம் பெற்று கட்டடத்தைக் கட்ட வேண்டும். பெரும்பாலும் அங்கீகாரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் ப்ளான்படி யாரும் கட்டடம் கட்டுவது கிடையாது. அப்படி கட்டவும் முடியாது. ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ள ஒழுங்குமுறைப்படி கட்டடம் கட்டுவதில் நிறைய பிரச்னைகள் உண்டு. (ஒரு கட்டடத்திற்குள் வந்து போகும் மக்களின் நலனுக்காகவே இதுபோன்ற சட்ட கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்)

சென்னைத் தலைமைச் செயலகக் கட்டடத்திற்கும் இதேபோல் ப்ளான் அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட்ட நாள் 8.3.2010 (அரசாணை எண் MS. NO: 54) ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்பிங் டிபார்ட்மென்ட் சார்பில் அரசாணை வெளியிட்டு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான ப்ளானை அப்ரூவல் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஆனால் இந்த அரசாணை வழங்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது, 13.3.2010. அதாவது ஐந்து நாட்களில் அந்த ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்திருக்கிறார்களாம். நடந்தது என்னவென்றால், ப்ளான் அப்ரூவலுக்கு முன்பே அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமீறல்.

இன்னும் கட்டுமானப்பணி நடக்கிறதென்றால், கட்டி முடிக்காத கட்டடத்தில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே செயல்பட்டு வந்த கோட்டையிலிருந்து இவ்வளவு அவசரமாக காலி செய்து இங்கே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய காரணங்கள் என்ன? ப்ளானிங் அப்ரூவல் இன்றியே ஏழு மாடிக் கட்டடத்தை கட்டி முடிக்க இந்த அரசு சட்ட மீறலை செய்திருக்கிறது. அதுவும் சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தைக் கட்டவே சட்டமீறல் என்றால், அவர்களுக்கு சட்டமியற்ற என்ன அருகதை இருக்கிறது. சட்டத்தை மீறும் இவர்கள் எப்படி சட்டப்படியான நியாயப்படியான அரசை நடத்த அருகதை பெற்றவர்கள் ஆவார்.

பழைய வாடகை கட்டடத்தில் இருந்து சொந்தமான கட்டடத்திற்கு சட்டப் பேரவையைக் கொண்டு வர வேண்டும் என்றால் முறைப்படி, சட்டப்படி உரிய அனுமதி பெற்று ப்ளான் அப்ரூவல் வாங்கி கட்டடம் கட்ட வேண்டியதுதானே. அதற்குள் அவசரம் வேண்டியிருக்கிறது. நாளைக்கே தீவிரவாதிகள் உள்ளே புகுந்து (மும்பை தாஜ் ஹோட்டல் போல்) தாக்குதல் நடத்தினால் இந்தக் கட்டடத்திற்கான உரிய வரைப்படம் (ப்ளான்) இல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடியும்.

(பி.கு) நள்ளிரவில் தன்னைக் கைது செய்து கொண்டுவரப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலக
வளாகத்தை இடித்துத்தான் புதிய சட்டப் பேரவையைக் கட்டியிருக்கிறார், கலைஞர்.

அதேபோல் தன்னை அடைத்து வைத்திருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்குக் கொண்டு சென்று விட்டு, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் அந்த இடத்தில் அரசு மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.

Tuesday, March 30, 2010

மர்மயோகி உங்கள் மூளையை சலவைக்குப் போடுங்கள்!

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்றோ, பிரபாகரன் என் தலைவன்
என்றோ ஒருபோதும் சொல்லவில்லையே. ஏர்போர்ட்டில் குண்டு வைத்தது, சூளைமேட்டில் துப்பாக்கியால் சுட்டு கலவரம் ஏற்படுத்தியது, பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது என்னாமே உண்மைதான். ஆனால் அவற்றை தட்டிக் கேட்க வேண்டிய, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய (அதீத அதிகாரிம் படைத்திருந்த) இந்திரா (காந்தி) என்ன செய்து கொண்டிருந்தார்? அப்போதே ஏன் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியென்ன அவருக்கு புலிகள் மீது அக்கறை. இந்திரா நடவடிக்கை எடுக்காததற்கு வைகோவும், ராமதாஸும், பழநெடுமாறனுமா காரணம்? (இந்த மூன்று பேரையும் கடுமையா எதிர்ப்பவன் நான்) இந்தியா என்ற ஏகாதிபத்திய நாடு, இலங்கை என்ற சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.


அதனால்தான் நம்முடைய சொந்த நாட்டில் அவர்கள் செய்த நீங்கள் குறிப்பிடும் சம்பவங்களை கண்டுகொள்ளவில்லை, இந்திரா. அதாவது சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையை மிரட்ட ஆயுதக்குழுக்கள் வேண்டும் என்று இந்தி(ரா)யா நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இந்திரா விதைத்தார். ராஜிவ் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதன் அறுவடையை யார் செய்வார்கள்?

அடுத்து, ராஜிவின் அமைதிப்படை கொன்றுகுவித்தது, புலிகளையா? உண்மையில் அமைதிப்படை புலிகளால் விரட்டி அடைக்கப்பட்டனர். அமைதிப்படையினர் கொன்றொழித்தது, அப்பாவி மக்களைத்தான். குஜராத்தில் இருப்பவர்களும் மனிதர்கள், சீக்கியர்களும் மனிதர்கள்தான்.நான் மறுக்கவில்லையே. ராஜிவ் மற்றும் அவரோடு இறந்தவர்கள் மீது
பரிதாபப்படும் நீங்கள் ஏன் சீக்கியர்களுக்கு நியாயம் பேசமறுக்கிறீர்கள். நான் கேட்கிறேன், சிதம்பரத்தை செருப்பால் அடித்தானே ஒரு சீக்கியன். அப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறதா? அந்த சம்பவத்துக்கு ஏன் எந்தக் காங்கிரஸ்காரனும் கொதித்தெழவில்லை. காரணம், சீக்கியன் என்ன செய்தாலும் சும்மா இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ராஜிவ் படுகொலை பற்றி சுப்பிரமணிசுவாமி எழுதிய புத்தகத்தின் நகல் படிவம் என்னிடம் உண்டு. அதில் சோனியாவும், அவரது அம்மாவும் தான் ராஜிவை கொன்றவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்தக் காங்கிரஸ்காரனும் ஏன் கொதிக்கவில்லை. ஜெயின் கமிஷன் ராஜிவ் படுகொலை தொடர்பாக சுப்பிரமணியசுவாமி, காங்கிரஸ்தலைவர்கள் அர்ஜின்சிங், மார்க்ரெட் ஆல்வா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் விசாரிக்கப்படவில்லையே ஏன்?

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். கொலையாளியாக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவன் குடும்பமாக இருந்தாலும் காதல், காமம் எல்லாம் வரும் போகும். அது பசி போன்ற ஓர் உணர்வு.


அடுத்து, ஏற்கெனவே உங்கள் பதிவுகளைப் படித்தேன். குஷ்புவை விபசாரி என்கிறீர்கள். (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_27.html) கனிமொழியை அப்படி சொல்ல முடியுமா உங்களால்? அவரும் இதுபோல் பல கருத்துகளை தன் கவிதை மூலம் சொன்னவர்தான். அவரது தோழி சல்மா கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? குஷ்பு சொன்னது தவறாக இருந்தால் அதற்கு அவர் மீது வழக்குப் போட இது என்ன தலிபான்கள் தேசமா? ஆக, நளினி குஷ்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் வெறுப்பு பற்றி கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். (அதுசரி, குஷ்வுவைப் பற்றிய பதிவில் அவரது கவர்ச்சிப் படத்தை போட்டிருக்கிறீர்களே, குறைந்தது அரைமணி நேரமாவது செலவிட்டு அதை தேடி எடுத்திருப்பீர்கள், இல்லையா? அல்லது உங்கள் கணினியிலேயே வைத்திருந்த படமா?)


அசினுடைய கவர்ச்சிப்படத்தை உங்கள் பதிவில் போட்டுக் காட்டும் நீங்கள், (http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_24.html) மார்பகங்களை மோதவிடும் பாணியை கண்டுபிடித்தது குஷ்பு என்று எழுதியதைப் படித்து சிரித்தேன். அது ஒன்றும் குஷ்புவே இயக்கிய காட்சியா என்ன? நம்மைப் போன்ற ஆண் வர்க்கத்தின் வக்கிரம்தானே அது. பெரியார் மனைவியாக நடிக்கும் போதும் கூட குஷ்புவின் மார்பையே பார்த்துக் கொண்டிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் சிந்தனைகளை மறுஆய்வு செய்யுங்கள். ஏனென்றால் நளினி சிறையில் குழந்தை பெற்றதையே சமூகக் குற்றமாக்கும் உங்கள் மூளை சலவை செய்யப்பட வேண்டியது. நன்றி ....

Monday, March 29, 2010

நளினி விடுதலையை எதிர்க்கும் கருணாநிதி, கனிமொழிக்கு வணக்கம்...




நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக சென்னை, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? சோனியாவின் கோபத்துக்கு மட்டுமல்ல சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதும் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம். இந்தக் கருணாநிதியைத்தான் (பெயரிலேயே கருணை வேறு இருக்கிறது இந்த ஆளுக்கு) தமிழினத் தலைவர் என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ராஜீவ் கொலையில் தொடர்பிருப்பதாக நளினி மீது சுமத்தப்பட்ட குற்றம். அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் நளினி இதற்காக அனுபவித்த சிறை தண்டனை அதிகம் இல்லையா? மிஷாவில் கஷ்டப்பட்டவன் என் மகன் என்று சொல்லி அவனை முதல்வராக்கும் கருணாநிதிக்கு சிறையின் கொடுமைகள் தெரியாதா?

மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் கொலை செய்யப்பட்டார்களே அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்காத அரசுதானே இந்த தமிழக அரசு. ஊழியர்களுக்கு ஒரு நியாயம்? ராஜீவுக்கு ஒரு நியாயமா? தங்கள் கட்சியைச் சேர்ந்த தா.கி. கொலையில் தொடர்புடையவர்கள் யாரென்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத தமிழக அரசு , ராஜீவ் கொலையில் சட்டப்படியே நடந்து கொள்கிறதாம்.

கருணாநிதி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர். தன் கண்முன்னால் ஓர் அபலைப் பெண் சிறையில் வாடுகிறாள். பெற்ற மகளைப் பிரிந்திருக்கிறாள். நளினியைப் போல் எத்தனை எத்தனை பேர் இதுபோல் மரண வேதனையோடு சிறையில் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட நகர்த்தி வைக்க இந்தக் கருணாவுக்கு மனசில்லை.

தனக்குப் பின் எல்லாமே ஸ்டாலின்தான் என்று தன் மகனை முன்னிலைப்படுத்த முடிகிற கலைஞரால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணமுடியவில்லையாம். அவர் மகள் கனிமொழி, ஜெயலலிதா ஆட்சி என்றால் இலக்கியவாதிகளுடன் இணைந்து மனித உரிமை பேசுவார். இப்போதோ உலக மயமாக்கலை யாராவது எதிர்த்துப் பேசினால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் வள்வள் என்று விழுகிறாள். நளினி தன் மகளைப் பிரிந்து வாடுகிறாள். கருணாநிதி தனது வைப்பாட்டியுடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த வீட்டுக்கு இரண்டு நாட்கள் போகவில்லை என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி வெளியிட்ட (அதுவும் கருணாநிதிக்கு வலிக்காமல்) ஊடகங்கள் நளினி விடயத்தில் எங்கே போயின? நளினிக்காக பேச இங்கே யாருமே இல்லையா?

நளினி விடுதலையை ஆதரிக்கிறேன் என்று சொல்ல தி.மு.க.வில் ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே, அந்தக் கட்சியில் ஜனநாயகமும் இல்லை, ஜனநாயகவாதிகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது. நளினியை அவரது மகளோடு சேர்த்து வைக்க அப்படி ஒன்றும் சட்டம் ஒரு தடையாக இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் சட்டமே தமிழக அரசிடம் முடிவை கொடுத்துவிட்டு காத்திருந்தது. ஆனால் தமிழக அரசை வழிநடத்தும் இந்தக் கருணாநிதி எடுத்த முடிவு... அடத்தூ...

Friday, March 5, 2010

ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்!




டெல்லியில் திரிவேதி சாமியார் இன்டர்நெட் மூலம் விபசார புரோக்கராக செயல்பட்டார் என்று வெளியான தகவல் வடஇந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஆந்திரா, தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமான சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் அவருடைய பக்தர்கள் போதை மயக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் இட்டுக் கொண்டிருக்க அதை கண்கள் சொருகிய போதையோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருககிறார், கல்கி பகவான்.

இந்தக் காட்சி தெலுங்கு சேனலில் ஒளிப்பரப்பாக அவரது ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டு பரபரப்பாகிக்கிடக்கிறது. இந்நிலையில்தான் கர்நாடகம், தமிழகத்தில் மற்றும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பரமஹம்ச நித்யானந்த சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை இங்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலத்தில் மஹராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட (அன்னதான) கூட்ட நெரசலில் சிக்கி 70 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்தவை. இவைகளை எல்லாம் பொருத்திப் பார்த்தால் சந்தேகம் எழுகிறது.

அதுவும் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை அண்மையில் படித்து முடித்தில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் சதி வலைகள் பின்னுவதில் தேர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் உளவு நிறுவனம் உலகம் முழுவதும் செய்த கொலைகள் எத்தனையோ மறைக்கப்பட்டிருக்கினறன என்று அந்த நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ் கூறுவதை மேற்கண்ட சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ சதி வேலை இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அம்பலமாகிறது. நான் ஏதோ மேற்கண்ட சாமியார்களுக்கு வாக்காலத்து வாங்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அம்பலமாகி ஊடகங்களின் பார்வையை குவிக்கச் செய்திருப்பதைத்தான் நான் சந்தேகத்தோடு நோக்குகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயத்தையே வேரோடு அழிக்கும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை நிறைவேற்றப் போகிறார்கள். மக்களை விடுங்கள் இங்குள்ள எத்தனை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி தெரியும்? (பார்க்க .இந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டர்)
இந்தச் சட்டம் நிறைவேறினால் மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்தால் ஓராண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்திய நிலங்களில் அமெரிக்க நிறுவனங்கள் விவசாயம் செய்யும். பணப்பயிர்களை விளைவித்து அவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதன்மூலம் செயற்கையாக ஒரு பஞ்சத்தை உருவாக்கப் போகிறார்கள். இதுமட்டுமின்றி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அளித்துள்ள உறுதியின்படி 2011 ம் ஆண்டுக்குள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமான பல்வேறு சட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆம் நாம் எல்லாம் அமெரிக்க அடிமைகளாகிவிட்டோம்.

விடயத்துக்கு வருகிறேன். ஆகவே இப்படி வரப்போகிற நிறைவேற்றப்போகிற மக்கள் விரோத சட்டங்களையும், உர விலையை ஏற்ற மாட்டோம் ஆனால் உர நிறுவனங்கள் இஷ்டப்பட்ட படி விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற படு தேவடியாத்தனமான பட்ஜெட் அறிவிப்புகளையும் பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் கண்டு கொள்ளாமல் மக்களும், பத்திரிகைகளும் இருக்க வேண்டும். அதற்காக மேற்கண்ட சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய அனுமானம். இதில் அமெரிக்காவின் விருப்பப்படி இந்து மதத் துவேசமும் அடங்கியிருக்கிறது (எனக்கு எந்த மதமும் கிடையாது). நான் இப்படி எழுதுவது இப்படியான ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கத்தான். யோசியுங்கள். விவாதியுங்கள். அமெரிக்கா போன்ற ஒரு நாடு தன்னுடைய நலனுக்காக உலகில் எத்தனையோ உயிர்களை பலியாக்கியிருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி என் சந்தேகத்தை ஆராயுங்கள்.

Thursday, March 4, 2010

குஷ்பு, நமீதா வரிசையில் கலைஞருக்குக் கோயில்! சிறுத்தைகளின் ஆசை...


திருச்சியில் நேற்று நடந்த கலைஞர் குடிசைமாற்று வாரிய தொடக்க விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிகுமார், “கலைஞருக்கு கோயில் கட்ட வேண்டும். நாத்திகரான அவர் இதை விரும்பமாட்டார். அவருக்கு இதை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார் (ஆதாரம் நம்தினமதி நாளிதழ்)

இதைப் படித்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை.
வி.சி.கட்சியின் அறிவாளி, எழுத்தாளர் என்றெல்லாம் கூறப்படும் ரவிகுமார், அண்மையில்
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயைப் பற்றி வியந்து வியந்து ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதியிருந்தார். எளிமையான அருந்திராய் பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது ரவிகுமாரின எளிமையைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இருந்தபோதிலும் இப்போது அதுபற்றி நான் பேச வரவில்லை. அருந்ததிராயைப் புகழும் நீங்கள் பத்திரிகைகளில் ஆய்ந்து ஆய்ந்து கட்டுரைகள் எழுதும் நீங்கள் சமூக சீர்திருத்தத்தை எதிர்பார்க்கும் ரவிகுமார், கருணாநிதிக்குக்கோயில் கட்டுவதால் இந்த சமூகத்தில் என்ன மாறுதல் புரட்சி ஏற்பட்டு விடும் என்று கருதுகிறார்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்நோக்கி சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர் கருணாநிதிக்கு கோயில் கட்டச் சொல்வதில் அந்த மக்களின் முன்னேற்றத்தில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது. ரவிகுமார் அவர்களே, நீங்கள் ஒரு பேச்சுக்கு இதை சொல்வதாக இருந்தால் கருணாநிதியை இப்படி நக்கி (மன்னிக்கவும்) புகழ்வது எதற்காக? அதில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் என்ன? குஷ்பு, நமீதாவுக்குக் கோயில் கட்டும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.
ஆனால், புத்தரைப் பற்றி, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சதா காலமும் சந்திக்கும் நீங்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை அப்படியே சொல்வதென்றால், அடச்சீ....

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வரவேண்டாம் ப்ளீஸ் கௌதம் மேனன்!


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது, இது வழக்கமான வழவழப்பான கௌதம் மேனன் படம் என்று. படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடுகிறார் கார்த்திக் (சிம்பு). மலையாள கிறிஸ்துவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் சிம்பு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் வசிக்கிறார். அவரது மகள் தான் ஜெஸ்சி (த்ரிஷா) . இந்தப் படத்துக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்குமான ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் படத்தின் டிக்கெட்டுடன் உடனடியாக விண்ணப்பித்தால் த்ரிஷாவுடன் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விளம்பரம் செய்யலாம்.

கௌதம் மேனன் நிறைய காதலித்திருக்கலாம். தன் காதல் அனுபவங்களை அவர் படமும் எடுக்கலாம். ஆனால் அதற்காக அடுத்தடுத்து எத்தனை படங்களில் ஒரே கதையைப் பார்ப்பது? சிம்புவை அழகாகக் காட்டியிருக்கிறார். த்ரிஷாவையும்தான். சென்னையில் இப்படியொரு தெரு இப்படியான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? எதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது இந்தப் படம். நான் ஏன் உன்னைக் காதலித்தேன் என்று சிம்புவும், நான் ஏன் உன்னுடன் ஓடி வரமாட்டேன் என்று த்ரிஷாவும் படம் முழுவதும் விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் படத்தில் வெளிப்படையாகத் தெரியும் எரிச்சல்கள். ஆனால் கமுக்கமாக சில வேலைகளை தெரிந்தே செய்திருக்கிறார், கௌதம் மேனன். காக்க காக்க ஒளிப்பதிவாளர் என்ற கதாப்பாத்திரத்தில் கௌதம் மேனனின் படங்களில் வழக்கமாக வரும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார். என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே என்று நிஜ ஒளிப்பதிபாளர் ஆர்.டி.ராஜசேகர் கேட்காமல் விட்டால் ஆச்சரியம் தான். அந்தளவுக்கு அவரைப் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். சிம்புவின் காதலுக்கு அவர் உதவுகிறார், உதவுகிறார், உதவுகிறார் உதவிக் கொண்டே இருக்கிறார். விளக்குப் பிடிக்காதது தான் பாக்கி என்று நினைத்தால் கடைசியில் தன் ஆடம்பரமான வீட்டை அவர்கள் தங்குவதற்குக் கொடுத்து அதையும் செய்துவிடுகிறார். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ராஜசேகர்? இத்துடன், மலையாளிகளைத் தூக்கோ தூக்கென்று தூக்குகிறார், இந்த மேனன். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார். (கே.எஸ்.ரவிக்குமார் ஆகச்சிறந்த படங்களை செய்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை) அமீர் உலகப் படமொன்றினை சுட்டுப் (யோகி) படம் எடுத்ததற்காக கோபித்துக் கொண்ட இதே கௌதம், டிரயில்டு என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து பச்சைக்கிளி முத்துச்சரத்தை அப்படியே சுட்டதை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறாரே ஏன்? மலையாளிகள் உசத்தி, தமிழர்கள் என்றால் கேவலமா? ஏதோ கேரளாவில் இருப்பவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு சுற்றும் வீரர்கள் போலும் காக்க காக்க படத்தின் காமிரா மேன் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வருவது போன்றும் காட்டியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்குள் எல்லாம் போகாமல் படத்தைப் பார்த்தாலும், ஒரே காமெடிதான். படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ். முடிந்து விடும், முடிந்து விடும் என்று எழ முயற்சி செய்தால் திடீரென பாட்டைப் போட்டு கொல்கிறார்கள். அடியே கொல்லுதே பாடல் போலவே இந்தப் படத்தில் மூன்று நான்கு பாடல்கள் வருகிறது. சென்னையில் காதலி சிரித்தால் அமெரிக்காவில் வெள்ளைக்காரிகளுடன் நடனம் ஆடுகிறார்.பாடுகிறார். கடவுளே.. கடைசியில் தன் காதல் தோல்வி வரலாற்றை ஜெஸ்சி என்ற பெயரில் படம் எடுக்கிறார்கள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட த்ரிஷா இயக்குநர் சிம்வுடன் அமர்ந்து அந்தப் படததைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். மொத்ததில் இயக்குநர் விக்ரமனுக்கும், கௌதம் மேனனனுக்கும் என்ன வித்தியாசம் என்றே புரியவில்லை. விக்ரமனுக்கு ஏற்பட்ட நிலைமை கௌதமனுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. திறமையான இந்தத் தமிழ் இயக்குநரிடம் நாம் நிறைய வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறோம்.

Wednesday, February 17, 2010

சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் பயங்கரவாதிகள்!



‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.
- நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்