Saturday, February 11, 2012

நார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...




கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா’ மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூட வா, கோ, ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, நர்த்தகி ஆகிய தமிழகத்தில் உருவான படங்களும், பிரான்சில் உருவான் தீரா நதி மற்றும் கனடாவில் உருவான ஸ்டார் 67 ஆகியப் படங்களும் விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.

இந்த அறிவிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலை படத்தின் சார்பில் அதன் துணை இயக்குனரான நானும் பங்கேற்றேன். அதில் இயக்குநர் பாலுகேந்திரா பேசுகையில், “எது நல்ல படம்? என்று கேட்பது எது நல்ல உணவு? என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனேன்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும். அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும். அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாமலும் இருக்கும் அனைத்துப் படங்களுமே நல்ல படங்கள்தான்” என்றார். அது சரி அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை சொல்லிவிடுகிறேன். “பாலை திரைப்படத்தைத் தேர்வு செய்த நார்வே திரைப்பட விருது குழுவினருக்கு பாலை குழுவினரின் சார்பில் நன்றிகள்” சொன்னேன்.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்.

No comments:

Post a Comment