Wednesday, December 30, 2009

புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகம்!


அண்மையில் நான் எழுதிய ‘மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-இந்திய அரசின் கொள்ளைத் திட்டம்’ என்ற சிறு நூல், புத்தகக் கண்காட்சி அரங்கு (பூவுலகின் நண்பர்கள்) எண் இருநூற்றி முப்பத்தி மூன்றில் கிடைக்கிறது. (விலை ரூ.எட்டு மட்டுமே)


அதே அரங்கில், ‘நெய்தல்- கண்ணீரும் கண்ணீரும் சார்ந்த இடமும்’ என்ற ஆவணப் படமும் கிடைக்கும். மீன்பிடி சட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உள்ளாட்டு மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து வெளியேற்றும் போக்கையும் கடைபிடிக்கும் இந்திய அரசின் முகத்தைக் கிழிக்கிறது, இந்த ஆவணப் படம். விலை ரூ.ஐம்பது.

2 comments:

  1. வாழ்த்துக்கள்..!

    நிச்சயம் வாங்குகிறேன் நண்பரே..! படித்த பின்பு மீண்டும் பேசுகிறேன்..

    ReplyDelete
  2. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,

    சிங்கக்குட்டி.

    ReplyDelete