Wednesday, August 12, 2009

தந்தை பெரியாரை ஏமாற்றிய கருணாநிதி




பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்படுவது குறித்துதிருவாய் மலர்ந்திருக்கிறார், நமது முதல்வர் கருணாநிதி.


பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவது தொடர்பாக நேற்று முன்தினம்ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ''கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்அரசின் முடிவுக்கு அவரது வாரிசு ராஜேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்'' என்றுவழக்கம் போல் சமயோகிதம் என்று நினைத்து சப்பைக் கட்டுகட்டியிருக்கிறார்,நமது முதல்வர்.


இதில் முதல்வருக்கு நினைவு கூறுவதற்கு நம்மிடம்பல விடயங்கள் உள்ளன.



1. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.


2. கல்வியின் ஹாஸ்ய கதைகளும், ஆவலைத் தூண்டும் சரித்திர நாவல்களும் (நான்கல்கியின் தீவிர வாசகன்) பெரியாரின் சமூக சிந்தனை படைப்புகளும்என்றைக்கும் ஒன்றாகாது.


3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.


4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.


5.பெரியாரின் படைப்புகளை யாராவது திரித்து வெளியிட்டு விடுவார்கள்என்றால் மற்றவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கும்போது இதே அணுகுமுறையில் பார்க்கப்படுமா-?


6.பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிவிட்டால்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீமைகள் என்ன-?


7.தன்னை கலைஞர் என்று விளம்புவதை விரும்பும் கருணாநிதி ஒரு கலைஞனாகஒரு படைப்பை நாட்டுடைமை ஆக்க எதிர்ப்புத் தெரிவிப்பது உலக மகா அயோக்கியதனம்.



இதே பேட்டியில் தி.மு.க.வை மெனாரிட்டி அரசுஎன்று ஜெயலலிதா குறிப்பிடுவதை நிறுத்தும் வரையில்அவரை திருமதி என்றுதான் நானும் அழைப்பேன் என்றுகூறியிருக்கிறார். அரசியல் ரீதியான விமர்சனத்தைஅரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்.அப்படியென்றால் உங்களை மூன்று பெண்டாட்டிக்காரர் கருணாநிதி என்று அழைத்தால் பரவாயில்லையா-?


இப்படி சொல்வதால், ஜெயலலிதா என்ற ஒரு கொடுமையை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

2 comments:

  1. சுத்த பேத்தலான பதிவு!

    //கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. எதிராளியை மடக்கும்இந்தப் பதில் மூலம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கிறார்.//

    சும்மா ஒரு வாக்கியத்தை மட்டும் உருவிட்டு வந்து பேசக்கூடாது அண்ணே!

    கலைஞர் சொன்னது "உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமே யானால் மூதறிஞர் ராஜாஜி, கல்கி, வாரியார் போன்றவர்கள் எழுதிய நூல்களையெல்லாம் நாங்கள் நாட்டுடைமையாக்க முயன்றபோது, அதை நாட்டுடைமை ஆக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். மூதறிஞர் ராஜாஜியின் நூல்கள் நாட்-டுடைமையாக்கப்படவில்லை. கல்கி ராஜேந்திரன் பிறகு ஒப்புக் கொண்டார்"

    கல்கி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது உமக்கே தெரியும் போது கலைஞருக்கு தெரியாதா என்ன?

    //3.கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அவரது ரத்தஉறவான வாரிசு. அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு.
    4. பெரியாருக்கு அப்படி யாரும் இல்லை.//

    அப்படியா சார்! ரத்த உறவு இல்லையென்பதால் தான் அதற்கு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அதை ஒப்படைத்திருக்கிறார் ..வீரமணி யோக்கியரோ இல்லையோ ..சட்டப்படி இப்போது அவர் தலைமையில் உள்ளது ..நீங்கள் வேண்டுமானால் வழக்கு போட்டு அந்த உரிமையை வாங்கி விட்டு அரசிடம் சொல்லலாமே.

    அதற்கு தான் கலைஞர் சொல்லியிருக்கிறார் "அரசைப் பொறுத்தவரையில் மரபுரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நூல்களையும் நாட்டுடைமை ஆக்குவதில்லை என்பது தான்." ..இப்போ மரபுரிமை சட்டப்படி யாரிடம் இருக்கிறது என சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. பிரச்னை வெறும் பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை
    ஆக்குவதில் மட்டும் இல்லை. பெரியாரின் படைப்புகளில் வீரமணிக்கு
    மட்டுமே உரிமை உள்ளதாக நினைத்துப் பேசுவதுதான் பிரச்னையின் ஆணிவேர்.
    பெரியாரின் படைப்புகளை மற்றவர்கள் வெளியிடுவதில் தடை
    போடுவதில் சுயநலமும் ஏதேச்சதிகாரமும் அடைங்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்.
    பிரச்னையை பெரியாரின் பார்வையோடு நோக்கினால் சிக்கலே இல்லை.
    கலைஞரும் வீரமணியும் சந்தர்ப்பவாத நண்பர்கள் என்பதும் அதனாலேயே
    பெரியாரின் படைப்புகளை மற்றவர்கள் வெளியிடுவதில் வீரமணிக்கு ஆதரவாக
    கலைஞர் இருக்கிறார் என்பதும் நாடறிந்த விஷயம்.
    ஒருவேளை கலைஞர் இப்போது எதிர்கட்சியாக இருந்து,
    வழக்கம் போல் ஆளும் கட்சிக்கு சாதகமாக வீரமணி இருக்கும்பட்சத்தில்
    இதுபோல் கலைஞரால் பேசியிருக்க முடியாது. இதைப்புரிந்து கொள்ளுங்கள் ஜோ.
    கலைஞரைத் திட்டினால் என்னமா கோபம் வருகிறது சிலருக்கு.....

    ReplyDelete